Skip to main content

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Advani admitted to hospital again

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும்  சிறுநீரக பாதிப்புகளால்  அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்து வருகிறார்கள். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அத்வானி!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Advani returned home from the hospital

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்தனர். இந்நிலையில் அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று (04.07.2024) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Next Story

மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்குக் குறி; அத்துமீறும் செவிலியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
male nurse was involved in scamming women who came to the hospital

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது ஆலமரத்துப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட பாப்பாரப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், ராணுவ வீரர் மனைவியைக் குழந்தைகளுடன் கடத்தியதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த அதியமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

39 வயதான அதியமான் கடத்தூா் அருகே உள்ள மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்து வந்துள்ளார். அப்போது, நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை அதியமான் குறிவைத்து பேசி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை மருத்துவமனையில் செய்து தனது செல்போன் எண்ணை கொடுத்து நெருங்கி பழகி வந்துள்ளார். எப்போது வேண்டும் என்றாலும், எந்த உதவி வேண்டும் என்றாலும் அழைக்கலாம் என்று நம்பிக்கையானவர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இதனால், மருத்துவமனைக்கு வரும் பலருடன் அதியமானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட  அதியமான் நீதிமன்றங்களில் வேலை பெற்று தருவதாக கூறி, பலரிடம் பணத்தை வாங்கியுள்ளார். பின்னர், போலியாக பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுவரை இவரிடம் இராணுவ வீரரின் மனைவி, கணவனை இழந்தப் பெண் என மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வேலைக்காக கொடுத்து இழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பலரிடம் அதியமான் கைவரிசை காட்டியிருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்களை மட்டும் குறிவைத்து பழகும் அதியமான் சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இப்படி, மோசடி பேர்வழியாக இருக்கும் அதியமானுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை திசை மாற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, அதன் மூலமும் தனியார் மருத்துவமனையில் அதியமான் கமிஷனை பெற்றதை அறிந்த போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசடி மன்னன் அதியமான் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் 25 லட்சத்திற்கு மேல் பணத்தை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி மருத்துவமனை ஊழியா் ஒருவர் பண மோசடி, பாலியல் ஆத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.