Skip to main content

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி - சென்னை அணி அசத்தல்

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
csk doni

 

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று சென்னை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தியது.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.

 

முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்தது.   சென்னை அணி        19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

 

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.

 

இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற  5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 

 

கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.  கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 1 பந்து மீதமிருக்க ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜாவின் இசை குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

சென்னை, சாலிகிராமம் பகுதியிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் இளையராஜாவின் ரெக்கார்டிங் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ தரப்பினருக்கிடையே பிரச்சனை உண்டானது. இதனால், இளையராஜாவின் ரெக்கார்டிங்கிற்கு அங்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்பு இளையராஜாவிற்கு ஆதரவாக பாரதிராஜா, ரமேஷ் கண்ணா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். 
 

bjp

 


இதனையடுத்து தான் புதியதாக இசையமைக்கும் தமிழரசன் படத்துக்கு தனது வீட்டிலேயே 20க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை வைத்து பின்னணி இசை அமைத்துள்ளார். இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மிகச்சிறந்த முடிவு.  இளய ராஜாவின் பாடல்களின் வெற்றி அவரின் விரல்களில்தான் உள்ளது பிரச்சாத் ஸ்டூடியோவில் அல்ல. 100 ஆண்டுகள் இசைச்சக்ரவர்த்தியாக வாழ வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். 

 

Next Story

வெற்றி பெறுவதற்கு முன்பே கொண்டாடிய அதிமுக! காத்திருந்த அதிர்ச்சி செய்தி!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி  பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

 

admk



இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் அனைவரும் வெற்றி பெற்று விடலாம் என்று சந்தோஷத்தில் இருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் மா.பொ.பாண்டியராஜன் திமுகவின் பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இது அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இந்த வெற்றி தொடர்ந்து இடைத்தேர்தல்களிலும் கிடைக்கும்' என்று கூறினார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இதற்கு ஒரு படி மேல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வந்தனர்.



ஆனால் இந்த சந்தோசம் கொஞ்சம் நேரம் கூட நீடிக்கவில்லை. அடுத்து சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 7ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதன் பின்பு வந்த அனைத்து சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தே முன்னிலை வகித்து இறுதியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை விட அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.