Skip to main content

பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய விவகாரம்! - மன்னிப்பு கோரினார் ஆளுநர்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை, மாணவிகளைத் தவறான வழியில் பயன்படுத்த முயன்ற விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நேற்று மாலை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

 

Banvarilaal

 

செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடைந்த நிலையில், எழுந்துவந்த ஆளுநர் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியத்தின் கன்னத்தில் தன் கைகளால் தட்டினார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த செய்கை குறித்து கடுமையாக பதிவிட்டிருந்தார். ‘என் பணியைப் பாராட்டும் விதமாகவோ, வயதில் மூத்தவர் என்ற அடிப்படையில் அன்பை சலுகையாக வழங்கும் விதமாகவோ ஆளுநர் என் கன்னத்தைத் தொட்டிருக்கலாம். ஆனால், அதற்கு என்னிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது மிகப்பெரிய தவறு’ என அவர் தெரிவித்திருந்தார்.

Banwarilal

இந்நிலையில், தனது செய்கைக்கு மன்னிப்பு கோருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மன்னிப்புக் கடிதத்தையும் பெண் செய்தியாளர் லட்சுமிக்கு மின்னஞ்சல் வாயிலாக அவர் அனுப்பியுள்ளார். அதில், ‘சிறப்பாக கேள்வி கேட்டதால் பாராட்டும் விதமாகவும், தன் பேத்தி என்று நினைத்தும்தான் செய்தியாளரின் கன்னத்தைத் தட்டினேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இதுகுறித்து செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் கேள்விகளைப் பாராட்டும் விதமாக நீங்கள் என் கன்னத்தைத் தட்டியாதக் கூறியிருக்கிறீர்கள். ஆனால், அது என்னை ஆற்றுப்படுத்தவில்லை என்றாலும், நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Punjab Governor banwarilal Purohit resigns

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஆகிய பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 14 வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல்  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

One more petiOne more petition in Supreme Court against Tamil Nadu Governortion in Supreme Court against Tamil Nadu Governor

 

சுதந்திரத்திற்காகவும் போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு சபை அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுகிறார். அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.