Skip to main content

சிறப்பு செயலாளர் பதவி விவகாரம் - ஆளுநரின் செயலாளருக்கு நோட்டீஸ்!

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
tn

 

தமிழக சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் வசந்திமலர், இணை செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  விதிகளை மீறி ’சிறப்பு செயலாளர்’ பதவியை உருவாக்கி அனுபவம் இல்லாதவரை நியமித்துள்ளதாக வழக்கு மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், பேரவை சிறப்பு செயலாளரை நியமிக்க எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கூடாது என்று அரசு தரப்பு வாதிட்டது.  இதன் பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும், பேரவை சிறப்பு செயலாளர் சீனிவாசன் நியமனத்திற்கு எதிரான வழக்கில் ஆளுநரின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் எல்.எஸ்.வசந்திமலர், இணைச் செயலாளர் பி.சுப்பிரமணியம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  ‘’தமிழக சட்டப் பேரவையில் பணியாற்றும் ஊழியர்கள் நியமனம் தமிழ்நாடு சட்டப் பேரவை சர்வீஸ் விதிகள் 1955ன் கீழ்தான் நடைபெற வேண்டும். இந்த  நியமனத்தில் முதல்நிலை பணிகளுக்கான நியமனத்தை ஆளுநர் மட்டுமே செய்ய முடியும். 

 

ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தமிழக சட்டப் பேரவையின் சிறப்பு செயலாளராக பேரவைத் தலைவரின் தனி உதவியாளராக பணியாற்றி  வரும் கே.சீனிவாசனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் செயலாளர்களாக பதவி வகித்து வருபவர்கள் மட்டுமே பேரவைச் செயலாளராகவோ, பேரவை சிறப்பு செயலாளராகவோ பதவி உயர்வு பெற முடியும்.  பணி மூப்பு அடிப்படையில்  தற்போது பேரவைச் செயலாளராக பதவி வகித்து வரும் பூபதி வரும் 28ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவியைப் பெற சட்ட  விதிகளின்படி மனுதாரர் வசந்திமலருக்கு முழு உரிமை உள்ளது.

 

 பேரவை கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோருக்கு மட்டுமே பேரவைச் ெசயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது  விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், விதிகளுக்கு முரணாக பேரவைச் செயலாளரின் தனி உதவியாளர் என்ற அடிப்படையில் சீனிவாசனுக்கு பேரவை  சிறப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, சட்ட விரோதமான இந்த நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இடைக்கால உத்தரவாக சிறப்பு  செயலாளர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.

 

கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 1 -ம் தேதிக்கு  தள்ளிவைத்தார். இவ்வழக்கின் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் ஆளுநரின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Supreme Court Notice to Election Commission

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டுகளை (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) முழுமையாக எண்ணக் கோரி ஏ.டி.ஆர். என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரங்களில் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யப்படுகின்றன. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சதவீத விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக 100 சதவீதம் முழுமையாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “கூடுதல் அலுவலர்களை நியமித்து விவிபேட் இயந்திரத்தில் பதிவான அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

Next Story

வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The Supreme Court ordered the Income Tax Department to take action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த 1993 - 94, 2016 - 17, 2017 - 18, 2018 - 19 மற்றும் 2019 - 20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அதே சமயம் வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்ய தடைகோரி காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014 - 15 நிதியாண்டு முதல் 2016 -17 நிதியாண்டு வரை ரூ. 1745 கோடி வருமான வரி பாக்கி இருப்பதாக புதிய நோட்டீஸை அனுப்பியது. இதனையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி நாடியது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (01.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், “காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ. 1700 கோடி வசூல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கமாட்டோம்” என உறுதியளித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது” என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.