Skip to main content

மறைந்த நரசிம்மராவுடன் தம்பிதுரை இப்போது பேசுகிறாரா? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
sr

 

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி சென்று நரசிம்மராவுடன் இருப்பார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியதால் 14 வருசத்துக்கு முன்ன மறைந்த நரசிம்மராவ் இப்போ பிரதமரா? அவருடன் தம்பிதுரை பேசுகிறாரா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இவ்விழாவில் பங்கேற்றார்.  விழாவில் பங்கேற்க வேண்டிய தம்பிதுரையின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.   இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, தம்பிதுரையை புகழ்ந்து பேசினார். அப்போது அவர்,

 ‘’அவருடையை தொகுதி பரமத்தி வேலூர் வரை இருக்கிறது.  காலையில் அங்கே இறங்கி பேசிவிட்டு ஊர் ஊராக மின்னல் வேகத்தில் வருவார்.  மத்தியான சாப்பாடு வேடசந்தூர். சாயங்கால சாப்பாடு புதுக்கோட்டை.  அப்புறம் இன்னொரு தொகுதிக்கு போயிடுவார்.  போயிட்டு டெல்லிக்கு போய் சேர்ந்திட்டு நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார்’’

என்று தெரிவித்தார். 

 

   முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், கடந்த 2004ம் ஆண்டில் டிசம்பர் 23ம் தேதி மறைந்தார். 14 வருடங்களுக்கு பின்னர் அவர் இப்போது பிரதமராக இருப்பது போலவும், அவர் டெல்லியில் இருப்பது போலவும், அவரை தம்பிதுரை சந்தித்து பேசுவது போலவும் சீனிவாசன் பேசியதால்,  என்னது ...14 வருசத்துக்கு முன்ன மறைந்த நரசிம்மராவ் இப்போ பிரதமரா? அவருடன் தம்பிதுரை பேசுகிறாரா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Announcement of 'Bharat Ratna' award to former Prime Ministers

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கடந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9ஆவது பிரதமராக பதவி வகித்தவர் ஆவார். சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழிநடத்தியது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆவார். இவர் சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கும், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“ஊழலை ஒழிப்பதே அதிமுகவின் நோக்கம்..” - எம்.பி. தம்பிதுரை 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

"The aim of ADMK is to eliminate corruption." - MP Thambidurai
கோப்புப் படம்

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு செய்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், பூத் கமிட்டி  திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான தம்பிதுரை கலந்துகொண்டு பூத் கமிட்டி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய தம்பிதுரை, “தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் வேறு மற்ற நடிகர்கள் வேறு. நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று காணாமல் போய் உள்ளனர் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

திமுகவில் கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் இன்று காணாமல் போய்விட்டது. திமுக என்ற கட்சியும் விரைவில் காணாமல் போகும். அதிமுகவின் நோக்கம் தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஒழிப்பது மட்டுமே” என்றார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.