Skip to main content

சென்னையில் சிறுமி வன்கொடுமை: உயர்நீதிமன்ற வளாகத்தில் 17 பேருக்கு தர்ம அடி - உதை!

Published on 17/07/2018 | Edited on 18/03/2019
beat 1


சென்னையில் 12வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்ற பகுதியில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12வயது காது கேளாத சிறுமியை மிரட்டி அந்த குடியிருப்பில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர்.
 

beat 2


அதில் 66 வயதான ரவிக்குமார் என்ற லிஃப்ட் ஆப்ரேட்டர், அங்குள்ளவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தனது மகளை கடந்த ஜனவரி மாதம் முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். மேலும், செல்போனில் சிறுமியை ஆபசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய அந்த நபர்கள், கத்தி முனையில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுமிக்கு நடந்த இந்த துயர சம்பவம் தற்போது தான் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும், அவர் பல நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
 

beat 3


இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் 25க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், லிப்ட் ஊழியர்கள், செக்யூரிட்டிகள், பிளம்பர்கள் என 17 பேர் குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது போஸ்கோ சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
 


இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 17 பேரையும் ஜூலை 31 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அவர்களை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லும்போது, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற பகுதியில் வழக்கறிஞர்கள் சிலர் 17 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

 

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.