Skip to main content

ஸ்டாலினை ஏமாற்றும் தி.மு.க. நிர்வாகிகள்!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
M. K. Stalin

 

 

ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களை காணொளி கூட்டங்கள் வாயிலாக வரிசையாக அடுக்கி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். ஜனவரியிலிருந்து அவர் நேரடியாகப் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் கனிமொழி, உதயநிதி, பொன்முடி, லியோனி என கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பரப்புரை பயணத்தை இப்போதே தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி ஏரியாவிலிருந்து பரப்புரையைத் தொடங்கிய கனிமொழிக்கு நல்ல வரவேற்பு.

 

"மக்களிடமும் மாற்றத்திற்கான மனநிலை உள்ளது. அடிமட்டத் தொண்டர்களிடமும் வேகம் தெரிகிறது. ஆனால், நீண்டகால நிர்வாகிகளின் உள்குத்து தி.மு.க.வின் தீராத வியாதியாகப் பல மாவட்டங்களில் தொடர்கிறது. மலை மாவட்டமான நீலகிரியில் இது சிகரமாக உயர்ந்து நிற்கிறது'' என வேதனையோடு சொன்னார்கள் உடன்பிறப்புகள்.

 

காணொளி வழியே நடந்த நீலகிரி மாவட்ட முப்பெரும் விழா கூட்டத்தில், "நாம் ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்போம்'' என மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். கொடநாடு மர்மக் கொலைகளின் சூத்ரதாரியான சஜீவனுக்கு அ.தி.மு.க.வின் வர்த்தக அணிப் பொறுப்பை எடப்பாடி வழங்கியதை சுட்டிக்காட்டி ஸ்டாலின் இப்படிச் சொன்ன நிலையில்... நீலகிரி தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. சஜீவனுடன் அரசியல் -வர்த்தக உறவு வைத்திருப்பது மெல்ல மெல்ல அம்பலமாகி வருகிறது.

 

ddd

 

"எங்க மாவட்டச் செயலாளர் முபாரக்குக்கும், எக்ஸ் மினிஸ்டர் இளித்துறை ராமச்சந்திரனுக்கும் ஏழாம் பொருத்தம்ங்கறது எல்லாருக்குமே தெரிஞ்சதுதான். ஆனா இப்போ முபாரக் இளித்துறைகூட பின்னிப் பிணையிறாரு. பல கோடிகள் செலவழிச்சு இந்த ஊட்டியில கட்சி ஆபீஸ் கட்டியிருக்கிறோம். ஆனா இந்த ஆபீஸ் படிகள் ஏறக் கூட முபாரக்குனால முடியறதில்லை. கட்சி கூட்டம் ஏதாவது நடத்துணும்னா ஹில் பார்க்ல இருக் கற ஆ.ராசா எம்.பி.யின் படிகளே இல்லாத அலுவலகத்தைதான் பயன்படுத்துறாரு முபாரக். அதனால தி.மு.க. கட்சி ஆபீசு சும்மா இருக்குதுன்னு நினைக்காதீங்க. ஊட்டி தி.மு.க. முன்னாள் ந.செ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ரவிக்குமார், கட்சி ஆபீஸை கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி நடத்தும் இட மாக மாற்றிக்கொண்டுவிட்டார். ஊட்டி மார்க்கெட்ல. கடை வச்சிருக்குற அத்தனை அ.தி.மு.க.காரங்களும் தி.மு.க. ஆபீசுல கூடித் தான் பஞ்சாயத்து பண்ணுறாங்க'' என்கிறார்கள் சொந்தக் கட்சிக்காரர்களே. ""கட்சி ஆபீசுக்கு லிஃப்ட் போடணும்னு சொல்லி மார்வாடிகளிலிருந்து மளிகைக் கடைவரை வசூல் நடத்தப்பட்டதால்... தி.மு.க. கொடி போட்ட கார்களைப் பார்த்தாலே ஊட்டி வியாபாரிகள் தெறித்து ஓடும் நிலை உருவாகி யுள்ளது'' என்றும் கூறுகிறார்கள்.

 

இது குறித்து அறிவாலயத்திற்குப் புகார்கள் பறந்த நிலையில், மாவட்ட அரசியலில் எலியும் பூனையு மாக இருந்த முபாரக்கும் முன்னாள் அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனும் திடீர் நட்பு கொண்டிருப்பது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் சூட்சுமம் குறித்தும் கட்சிக்காரர்கள் விளக்குகிறார்கள்.

 

"குன்னூரில் முபாரக்கும், ஊட்டியில் ராமச்சந்திர னும் போட்டியிடலாம் என முபாரக் தெரிவித்துள்ளார். ராமச்சந்திரனின் இளித்துறை கிராமம் குன்னூர் தொகுதியில் உள்ள நிலையில், அவரை ஊட்டிக்கு அனுப்ப முபாரக் நினைப்பதிலும் அரசியல் உள்ளது. ஊட்டியில் உள்ள வடக்கு ஒன்றியத்தின் செயலாளர் துரை, தெற்கு ஒன்றியத்தின் பரமசிவம், மேலூர் ஒன்றியத்தின் உதயதேவன் மூவருமே முபாரக் ஆதரவாளர் கள். ந.செ. ஜார்ஜ் மட்டுமே ராமச்சந்திரனுக்கு நெருக்கம். அதனால், சீட் கிடைத்தாலும் ஊட்டியில் ராமச்சந்திரன் வெற்றிக்குப் போராடவேண்டும். இது அ.தி.மு.க. வர்த்தக அணி பொறுப்புடன், நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் எடப்பாடியால் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் சஜீவனுக்கே சாதகமாகும்'' என்கிறார்கள்

 

ddd

 

தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளரான ஆளன் நம்மிடம், "நான் 1986-ல இருந்து தி.மு.க.வுல இருக்கறேன். உங்களுக்கு வந்த தகவல்களில் உண்மை இருக்கு. அ.தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பாளராக சஜீவன் நியமனம் செய்யப்பட்ட பிறகு, தன் கட்சியினரை சந்திப்பதைவிட, தி.மு.க. நிர்வாகிகளை சந்திப்பதையே வேலையா வச்சிருக்காரு.

 

எங்க மா.செ முபாரக் ஆதரவாளரான நெல்லியா ளம் நகரச்செயலாளர் காசிலிங்கம், கேரளா வயநாடு சுல்தான் பத்தேரில இருக்கற ராபா ஆயுர்வேத ஆஸ்பத்திரியில முதுகு தண்டுவடப் பிரச்சினைக்கா அட்மிட் ஆகியிருப்பதை அறிந்து, அந்த ஆஸ்பத்தி ரிக்கே அ.தி.மு.க. சஜீவன் நேரில்போய் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வந்திருக்காரு. அ.தி.மு.க. தலைமை தனக்கு கொடுத்திருக்கிற தேர்தல் பொறுப்பாளர் பணியை வெற்றிகரமாக முடிக்க, தி.மு.க. நிர்வாகிகளின் ஒத்துழைப்பை சஜீவன் நாடுகிறார். அதற்காக என்ன செலவு செய்யவும் ரெடியாகிவிட்டார்.

 

நெல்லியாளம் நகராட்சியின் பல லட்சம் பெறுமானமுள்ள ரோடு காண்ட்ராக்ட், ஏற்கனவே பார்த்த காண்ட்ராக்ட் வேலைக்கான பென்டிங் பணம் 20 லட்சம்னு எல்லாமே க்ளீயராகுது. நீலகிரி தி.மு.க. வினரைப் புரிந்துகொண்டு சஜீவன் சாமர்த்தியமா வேலை பார்க்கிறார்'' என்கிறார் உண்மையாய்.

 

நாம் கேரளாவில் உள்ள ராபா ஆஸ்பிடலுக்கு நேரில் சென்று, சஜீவன்-காசிலிங்கம் சந்திப்பை உறுதிப்படுத்திக்கொண்டோம்.

 

நீலகிரி தி.மு.க.வினரிடம் பேசியபோது, "இதே நெல்லியாளம் நகராட்சியில ரோடு காண்ட்ராக்ட்டுக்கு நாங்க போய் நின்னபோது, எங்க எம்.எல்.ஏ. திராவிட மணி சப்போர்ட் பண்ணலை. அவர் சிபாரிசு லிஸ்ட்ல, அ.தி.மு.க. ஒப்பந்ததாரர்கள் பெயர் இருந்தது. ஆனா, நகராட்சியின் லேடி கமிஷனரோ, "இதில் உள்ள அ.தி.மு.க.காரங்க சாலைப்பணி செய்ய வர்ற பணியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை கட்றதேயில்லை'ன்னு சொல் லிட்டாங்க. சஜீவன் தலையிட்டபோதும் லேடி கமிஷனர் உறுதியா மறுத்துட்டாங்க'' என்கிறார்கள்.

 

தி.மு.கவினரின் தன்னிச்சையான போக்குகளால் தொகுதி எம்.பி. ஆ.ராசா கோபப்பட்டதையும் உடன்பிறப்புகள் விளக்கினார்கள். "இங்கே காந்தல்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே உள்ள 7 வார்டுகள்லயும் சாக்கடை வசதி சரியா இல்லைனு ஆ.ராசாகிட்ட ஊர்வாசிகள் புகார் கொடுத்தாங்க. அவரும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்ச ரூபாய் கொடுத்தாரு. அவர் பி.ஏ. அந்த பொறுப்பை தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார்கிட்ட கொடுத்துட்டாரு. வேலை ஏனோதானோன்னு பெயரளவுக்கு மட்டுமே நடந்தது.

 

ஆ.ராசா ஊட்டிக்கு வந்ததை தெரிஞ்சுகிட்ட காந்தல் பகுதி மக்கள் அவரைச் சந்திச்சு ரவிக்குமார் பண்ணினதை சொல்லிட்டாங்க. இதுபோன்ற தொடர் செயல்பாடு களால் நீலகிரி மாவட்ட தி.மு.க. தள்ளாடுவதை தெரிஞ்சிக்கிட்ட ராசா, நிர்வாகிகளையும் பி.ஏ.வையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு. காந்தல் மக்களின் பிரச்சினைகளை சரிசெய்ய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 23 லட்சத்தை எடுத்துக் கொடுத்திருக் காரு. அவர் மேற்பார்வையிலேயே அதிதீவிரமாக வேலைகள் நடந்துட்டு இருக்கு'' என்றனர்.

 

"நேரடிக் கண்காணிப்பு இல்லாவிட்டால், சஜீவன் போன்ற வெயிட்டான அ.தி.மு.க ஆட்களிடம் சிக்கிக்கொள்ளும் நீலகிரி தி.மு.க. நிர்வாகிகள் போல, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் சாதி -பணம் -டெண்டர் -பர்சன்டேஜ் என பல வகைகளில் அ.தி.மு.க.வுடன் அண்டர்ஸ்டாண்டிங்கில் இருக்கிறார்கள்.

 

கடந்த 2016 தேர்தலில் மேற்கு பகுதியில் நீலகிரி மாவட்டம் மட்டுமே தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. அங்கேயே இத்தகைய நிலை என்றால், எடப்பாடி பழனிச்சாமியின் சமூகம் நிறைந்துள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளின் ஆளுந்தரப்புடனான அண்டர்ஸ்டாண்டிங் அரசியல் அதீத அளவில் உள்ளது'' என்கிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள்.

 

பலன் எதிர்பாராத தொண்டர்களின் உழைப்பிலும்- கச்சிதமாக வியூகம் வகுத்து தலைமை மேற்கொள்ளும் செயல்களாலும் தி.மு.க.வுக்கு விளையக்கூடிய வெற்றியை, சஜீவன் போன்ற அ.தி.மு.க. புள்ளிகள் அறுவடை செய்வதை உடன் பிறப்புகளால் ஜீரணிக்க முடியவில்லை. அறிவாலயத் திற்குப் பலமுறை புகார்கள் சென்றாலும், அதிரடி நடவடிக்கை எடுப்பதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார்'' என்பதே உடன்பிறப்புகளின் ஆதங்கமாக இருக்கிறது.

 

"உள்ளடி என்பது தி.மு.க.வில் நிரந்தர நோயாகப் பரவியுள்ளது. ஆபரேஷன் செய்யாமல் நோய் குணமாகாது. தவறினால், ஸ்டாலினின் உழைப்பும் வியூகமும் உரிய பலனைத் தராது' என்கிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள்.

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.