Skip to main content

"இதெல்லாம் தெரியாமலா கலைஞர் ராஜ ராஜ சோழனுக்கு விழா எடுத்தார்?" - ரஞ்சித் விவகாரத்தில் ராஜ்மோகன்   

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

தஞ்சை மாமன்னர் ராஜ ராஜ சோழன் குறித்தும் அவரது ஆட்சிக்காலம் குறித்தும் ஒரு கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துப் பேசியது புயலை கிளப்பியுள்ளது. ராஜ ராஜ சோழன் ஒடுக்கப்பட்டவர்களின் நிலத்தைப் பிடுங்கி அந்தணர்களுக்குக் கொடுத்ததாகவும் அவரது ஆட்சி இருண்ட ஆட்சி எனவும் இன்னும் சில கருத்துகளையும் ரஞ்சித் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள் பலர் ரஞ்சித்தின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகளும் பல்வேறு சங்க, அமைப்பு பிரதிநிதிகளும் ரஞ்சித்தின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யூட்யூபில் பிரபலமான 'புட்சட்னீ' ராஜ்மோகன் ரஞ்சித்தின் பேச்சிற்கு மறுப்பையும எதிர்ப்பையும் தெரிவித்து விரிவான விளக்கத்தைக் கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்...

 

raj mohan



ராஜராஜ சோழன் பற்றி ரஞ்சித் தெரிவித்த கருத்துக்கு எதிரா நீங்க ஒரு வீடியோ போட்டிருந்தீங்க, அதற்கு எதிரான விமர்சனங்களும் உங்களுக்கு வந்திருந்தது, அதை எப்படி பாக்குறீங்க?

நல்லதுதாங்க... விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்பேன். நம்மள விமர்சனம் பன்னி இப்ப ஒன்னும் புதுசாக வரல. எப்போதுமே விமர்சனம் பண்ணுவாங்க. இது ஒரு நல்ல ரீச். 90 சதவீத பேர் அதை பாராட்டினாலும், 10 சதவீத பேர் அதை விமர்சனம் பண்றாங்க. அதில் இருந்து என்னை எப்படி வளப்படுத்திக்கலாம்னுதான் நான் பார்ப்பேன்.என்னையும் சரி, ராஜராஜனையும் சரி, ரஞ்சித்தையும் சரி கொச்சை வார்த்தை போட்டு திட்றவங்களை புறக்கணிச்சிட்டு போயிடுவேன். அந்த மாதிரி விஷயங்களை நான் பார்க்கிறது இல்லை.


ராஜராஜ சோழன் காலம் பொற்காலம்னு புனிதப்படுத்துவது சரியா? அந்த காலகட்டத்தில் எந்த பிரச்சனைகளுமே இல்லையா?

பிரச்சனை இருந்தது உண்மைதான். புனிதப்படுத்துவது மிகச் சரினு சொல்றதை காட்டிலும் சிறுமைப்படுத்துவது கூடாது என்பதுதான் நம்ம வாதம். ராஜராஜனை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனா விமர்சனம் செய்வதற்கு ஒரு அடிப்படை ஆதாரம் வேணும் இல்லையா? அதோடு விமர்சனம் செய்யவேண்டும். ஆனா, வெறும் உணர்வுப்பூர்வமாக விமர்சனம் செய்தால், நம்ம சமூகத்துல ஆளுமையே இல்லாம போயிடும். இந்த மாதிரி நேரத்துல நமக்கு நம்பிக்கையை கொடுப்பவர்கள் இந்த மாதிரி ஆளுமைகள்தான். அவர்கள் குறித்து தவறான தகவல்கள்  தெரிவிக்கப்படும் நிலையில்தான் அதற்கான விளக்கம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

 

 

pa.ranjith



நீங்களே இரண்டாவதா போட்ட வீடியோவில் சொல்றீங்க, பிராமணர்களுக்கு ராஜராஜ சோழன் நிலம் வழங்கியதற்கான குறிப்பு இருக்குன்னு. அப்ப அவர் யாருடைய நிலங்களை வழங்கிறார்?

யாருடைய நிலங்கள் அது... நிலம் உங்களுக்கு சொந்தம், எனக்கு சொந்தம். அனைவருக்கும் பொதுவானது. இன்னும் சொல்லப்போனால் நிலம் யாருக்கும் சொந்தமில்லாத காலகட்டமும் இருந்தது. அதன்பிறகு வரி வசூல் செய்வதற்காக இந்த மன்னர்களால் பிரித்தாளப்பட்டது. அந்தணர்களுக்கு எல்லா நிலங்களையும் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ராஜராஜன் கைகட்டி நின்றார், டயரை கும்பிட்டார் என்ற மாதிரி சொல்வது தவறான ஒன்று. அந்த காலத்துல ராஜராஜ சோழன் தவறு செய்த அந்தணர்களை சிறைபடுத்தியிருக்கார், நாடுகடத்தியிருக்கார். அந்தணர்களுக்கு ராஜராஜன் நிலம் கொடுத்து உண்மை. அதற்காக யாருடைய நிலத்தையும் அபகரித்துக் கொடுக்கவில்லை.


அப்போ நிலங்களை கொடுத்திருக்கார் இல்லையா?

ஆமாங்க, கொடுத்ததுக்கான ஆதாரம் இருக்கு, பறித்ததற்கான ஆதாரம் இல்லை. அவரு எங்கேயும் பறிக்கவில்லை. இப்பவும் நீங்க நம்பாம பேசினீங்கனா அது விதண்டாவாதம்.

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை. தஞ்சாவூர் கோவிலாகட்டும் எகிப்து பிரமிடாகட்டும், சீன பெருஞ்சுவராகட்டும் அவற்றின் கலை வடிவத்தை போற்றலாம், ஆனால் அந்தகால மன்னர்களை போற்றுவது சரியா?

அயோக்கியத்தனம் என்பதை நாம தவறுன்னு சொல்றோம். முதல் கேள்வியில் இருந்து நான் அதைதான் சொல்றேன். அந்த காலகட்டமே தவறுன்னு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது. இன்னும் சொல்லப்போனால் விஜய நகர பேரரசுக்கு பின்னர்தான் ஜாதி பிரிவினையே வந்தது. ராஜராஜன் காலத்தில் அவர்கள் நல்ல நிலையில் இருந்தார்கள். இதை எந்த வராலாற்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதை எல்லாம் தெரியாமலா முன்னாள் முதல்வர் கலைஞர் ராஜராஜனுக்கு விழா எடுத்திருப்பார்.

அதில் கூட சர்ச்சை இருக்கே?

நீங்க இதுதொடர்பாக பொதுவான எந்த தலைவர்களிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். அதில் உள்ள உண்மையை அறிந்துகொள்ள இயலும். கம்யூனிஸ்ட் தலைவர் பேராசிரியர் அருணனிடம் கூட கேளுங்கள். அவர்கள் காலத்தில் ஜாதியே இல்லை என்று கூறுகிறார். அவரை ஜாதி அடையாளத்தில் அடைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அடுத்த பகுதி:

"ரஞ்சித், தமிழ் தேசியவாதிகளை, திமுக - அதிமுகவை விமர்சனம் செய்யட்டும். ஆனால்..." - ராஜ்மோகன்  

 

 

 

Next Story

“இரு மொழிப் பிரச்சனை; நிச்சயமா இந்த படம் விவாதத்தை உருவாக்கும்” - பா. ரஞ்சித்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
pa.ranjith speech in gv prakash rebel movie audio launch

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெபல். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க கருணாஸ், வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இசைப் பணிகளையும் கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில், ட்ரைல்ர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.  

அவர் பேசுகையில், “இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில் இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில் இந்தக் கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துகள். ஜிவியை எனக்கு தங்கலான் மூலமாகத்தான் பழக்கம். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகிய பிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனம் கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார்.

இந்தப் படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துகள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு பலம் இருக்கிறது. அதன் மூலம் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் கஷ்டப்படுகிற சின்ன படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உதவுகிறார் சக்தி பிலிம் சக்திவேலன். அவர் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போது ஜெ. பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என கேட்டால் அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. படம் பார்த்தவர்களுக்கு எல்லாருக்குமே பிடித்திருந்தது. நிறைய பேர் கொண்டாடுறாங்க. அதை பார்க்கும்போது வணிக ரீதியாக வெற்றியை விட ஒரு படம் முக்கியமானதாக பார்க்கப்படும் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கும். இது போலத்தான் அட்டகத்தி எனக்கு ஆரம்பித்தது. 

ஒரு தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், நான் இந்த துறைக்கு வரவில்லை. எனக்கென்று சில வேலைகள் இருந்தது, அதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் வந்தேன். அதன் பிறகு தயாரிப்பு பொறுப்பு வந்தவுடன் ரசித்து தான் பணியாற்றுகிறேன். ஒவ்வொரு கதைகளிலும் சரி, கதாபாத்திரங்களிலும் சரி, அனைத்திலும் என்னுடைய தலையீடுகள் இருக்கும். ஆனால் அது இயக்குநருக்கு பாதிப்பு ஏற்படாமல் தேவையான விஷயத்தை ஆதரிக்கிற வகையில் இருக்கும். நிகேஷ் இப்படத்தில் இரு மொழிப் பிரச்சனையைக்  கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். நிச்சயமா இந்த படம் ஒரு விவாதத்தை உருவாக்கும் என நினைக்கிறேன். அந்த விவாதம் சரியான இடத்தை நோக்கி நகர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார். 

Next Story

“மைல் கல் என்பதில் சந்தேகமே இல்லை” - அடுத்த பட அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
mari selvaraj next movie update

விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதை தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் அனுபமா பரமேஷ்வரன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியதாகவும் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசுகையில், “பரியேறும் பெருமாள், பா. ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும். திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.