Skip to main content

634 கொலைமுயற்சி, 5000 நிமிட சேமிப்பு, 70 வருட தாடி... ஃபிடல் காஸ்ட்ரோ 

Published on 13/08/2018 | Edited on 13/08/2018

சரித்திர நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் விடுதலைக்காக போராடி, மிகப்பெரும் வெற்றியைக் கண்டவர். ஃபிடல் காஸ்ட்ரோ என்றாலே மிகநீளமான தாடி, உயரமான, வெள்ளை உருவம் இதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு நியாபகம் வரும். ஆனால் அந்த தாடிக்கு பின்னும் கதை இருப்பது சிலருக்கே தெரியும். அவரைப்பற்றிய சில தகவல்கள்...

 

fidel castro


 

 

 

ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 634 முறை முயன்றுள்ளனர், பலரும், பலவிதமாக முயற்சித்தனர் ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்தனர் ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரோடு உடனிருந்தவர்களும்... 
 

கிட்டதட்ட 50 ஆண்டுகள் கியூபாவின் தலைவராக இருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. எலிசபெத் ராணி II, மற்றும் தாய்லாந்தின் மன்னர் பூமிபால் அதுல்யாதெச் ஆகியோருக்குபின் ஒரு நாட்டின் அதிகநாட்கள் தலைவராக இருந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. இவர் பதவியிலிருந்த காலத்தில் மட்டும் கிட்டதட்ட 10 அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்துள்ளது...
 

ஃபிடல் காஸ்ட்ரோவின் பழைய படங்களின் அதிகமானவை சிகரெட் பிடிப்பதுபோல இருக்கும். ஃபிடல் காஸ்ட்ரோவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த சிகரெட்டை 1985லிருந்து விட்டுவிட்டார், உடல்நிலை காரணங்களால்... 
 

சட்டப்பள்ளியில் படிக்கும்போதே அரசியல் ஆர்வலராக இருந்தார் இவர்...
 

இளம் போராளியாக இருந்தபோது மலையில் தங்கியிருந்தார். அப்போதிலிருந்து இறக்கும்வரை, 70 ஆண்டுகள் தாடி வைத்தபடியே இருந்தார். கொரில்லா வீரர் என்ற அடையாளத்திற்கு மட்டுமின்றி, அதற்கு நடைமுறை காரணத்தையும் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு 15 நிமிடத்தை சவரம் செய்ய செலவழித்தால் ஒரு வருடத்தில் 5000 நிமிடங்களை இழப்போம். என்று அவர் அடிக்கடி கூறுவார் என்றும் கூறுகின்றனர்... 
 

 

 


அவரின் சில பொன்மொழிகள்:


கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையேயான மரண போராட்டம்தான் புரட்சி...
 

தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்...
 

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்...
 

ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்...
 

நீங்கள் என்னைக் தண்டியுங்கள், சிறையிலடையுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு எனக்கு நீதி வழங்கும்...


 

 

 

 

Next Story

ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் நண்டுகள்... அதிரவைக்கும் புகைப்படங்கள்

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Thousands of invading crabs ... shocking photos

 

கியூபா நாட்டில் ஆயிரக்கணக்கான நண்டுகள் கடற்கரையை நோக்கிச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

கருப்பு, மஞ்சள், சிவப்பு நிற நண்டுகள் கியூபா நாட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கரோனா காரணமாகக் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனப்போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், நண்டுகள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நண்டுகள் சாலையைக் கடப்பது இயல்பானது என்றாலும் இந்த ஆண்டு அந்த இயல்பை மீறி அதிக அளவில் நண்டுகள் குவிந்து வருகிறது. எதிர்பாராது வரும் வாகனங்களின் சக்கரங்களில் சிக்கும் நண்டுகள் உயிரிழக்கவும் செய்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

ட்ரம்ப்பின் கடைசி நேர அரசியல்... வலுக்கும் கண்டனங்கள்...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

america implement new sanctions on cuba

 

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கியூபா, தற்போது மீண்டும் அந்த பட்டியலில் நீட்டிக்கப்பட்டு, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

கடந்த 1959 ஆம் ஆண்டு கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவியேற்றது முதல் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே மோசமான உறவே நீடித்துவந்தது. இதனால் கியூபாவை பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடு என அறிவித்து, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. பல தசாப்தங்களாக இந்த உறவில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த சூழலில், ஒபாமாவின் ஆட்சியில், பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து கியூபா நீக்கப்பட்டது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகளும் குறைந்தன. 

 

இதனையடுத்து, அதிபராக ட்ரம்ப் வந்தபின் மீண்டும் கியூபாவுக்கு எதிராகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தார். கியூபாவை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். அதிபர் ட்ரம்ப்பின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கியூபா மீதான பயங்கரவாத நாடு எனும் அறிவிப்பு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒபாமா ஆட்சிக்காலத்தில், கியூபா உடனான அமெரிக்காவின் உறவு மேம்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பைடன் விரைவில் அதிபராகப் பதவியேற்க உள்ள சூழலில், ட்ரம்ப் அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் கார்லோஸ் பெர்னான்டஸ் டி காசோ, "கியூபா பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடு அல்ல என்பதை அமெரிக்க அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனும் அவரின் அரசாங்கமும் உறுதியாக நம்பும். இந்த நம்பிக்கையுடன், ஜனவரி 20-ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ட்ரம்ப் அரசு கடைசி நேரத்தில் கூட ஆதாயம் தேடும் நினைப்பில் கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்தது கண்டனத்துக்குரியது. இது முழுமையான சந்தர்ப்பவாதம். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளச் செய்யும் முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.