Skip to main content

தேசிய தலைவர்களை ஜாதித் தலைவர்களாகப் பார்க்காதீர்கள்! - வானதி சீனிவாசன் பேட்டி

Published on 01/11/2018 | Edited on 02/11/2018
sardar vallabhbhai patel



குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். படேல் சிலை திறக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். தேர்தலையொட்டி வாக்குகளை கவருவதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை பாஜக நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன்.
 

குஜராத்தில் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் படேல் வாக்குகளை குறிவைத்து இந்த சிலை நிறுவப்பட்டதாக கூறுகிறார்களே?
 

நம்முடைய தேசிய தலைவர்களை இன்று ஜாதித் தலைவர்களாக பார்க்கின்ற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. படேல் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் நம்முடைய நாட்டிற்கு ஆற்றிய இந்த பணிக்காக நிச்சயம் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த பணியை மேற்கொண்டிருக்கும். நம்முடைய நாட்டினுடைய சுதந்திரத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக சீலர்களையெல்லாம் இன்று ஜாதி வழியாக பார்க்கின்ற வாக்கு வங்கி அரசியலாக இதனை பார்க்க வேண்டியதில்லை.

 

Vanathi Srinivasan


 

நர்மதை அணையால் பாதிக்கப்பட்ட 72 பழங்குடி கிராம மக்களுக்கு அறிவித்த திட்டங்களை கவனிக்காமல் இப்படி ஒரு சிலை தேவையா என்கிறார்களே?
 

அந்த திட்டங்கள் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பக்கமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய விஷயம். அந்த பழங்குடியின மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை, குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவது தவறு. அது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றம் கொடுத்த உத்தரவுகளெல்லாம் அங்கு அமல்படுத்தப்பட்டு அந்த மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 

சிலை திறப்பு அன்று அந்த மக்கள் உண்ணாவிரதம் அறிவித்தார்களே அதைக்கூட பாஜக அரசு கண்டுகொள்ளவில்லையா?
 

இந்த சிலையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். பட்டேல் சிலைக்காக விவசாயிகளிடம் இருந்து நாடு முழுக்க மண் மற்றும் இரும்பு சேமிப்பினுடைய தமிழ்நாட்டு பொறுப்பாளராக இருந்தேன். ஒரு மலைப்பாங்கான பிரதேசத்திற்குள் இருப்பதைப்போன்ற அந்த பகுதியில் பழங்குடியின மக்களுக்கு இந்த சிலை வாயிலாக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கான கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஒரு சில நபர்கள், அமைப்புகள் மோடி அரசுக்கு எதிராக அந்த மக்களை தூண்டிவிட்டார்கள். அவ்வளவுதான்.
 

எந்த விதத்திலேயும் அந்த மக்களுடைய இயற்கையான சூழல், இயற்கைக்கான பாதிப்பு வராமல் லட்சக்கணக்கானோரை திரட்டி இந்த நிகழ்வை கூட பிரம்மாண்டமாக செய்ய முடியும். இந்த துவக்க விழா இயற்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் வெறும் 5 ஆயிரத்திற்கு உட்பட்டோரை மட்டுமே வைத்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது.
 

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கான வாய்ப்புகள் இப்போது உள்ளது. வரக்கூடிய காலங்களில் இயற்கை சூழல் கெடாதவாறு சுற்றுலா மேம்பாடு வளரப்போகிறது. இயற்கை சூழலை பொறுத்தவரை மிக மிக எச்சரிக்கையாக இந்த அரசு கையாளுகிறது.
 

சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிலையை அருகில் இருந்து பார்க்க ரூபாய் 120ம், மேலே ஏறிப்பார்க்க ரூபாய் 350ம் கட்டணம் என்பது சரியா?
 

நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடம் என்பது முழுமையாக இலவசமாக இருக்க வேண்டியது இல்லை. பல்வேறு சுற்றுலா தலங்களில் வருகை தரக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் குறைந்த அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அது பராமரிப்புக்காக செலவிடப்படுகிறது. இவ்வளவு உயரமாக இருக்கக்கூடிய அந்த சிலைக்கு லிப்ட் பொறுத்தப்பட்டிருக்கிறது. சுற்றி இருக்கக்கூடிய மலர் பாதைகள், தோட்டங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்க எந்த ஒரு சுற்றுலா தலமாக இருந்தாலும், வளர்ந்த நாடுகளிலும் கூட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆகையால் அர்ப்பணிப்பு என்பதால் அனைத்தும் இலவசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.