Skip to main content

ஜெயலலிதா சொன்னதைத்தான் தினகரனும் சொல்லுகிறார்... -சி.ஆர்.சரஸ்வதி

Published on 07/06/2019 | Edited on 07/06/2019


 

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி.
 

''தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்கள் பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் நாங்கள் சென்ற இடங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. என்னுடைய அரசியல் அனுபவித்தில் அதை வைத்து பார்க்கும்போது கணிசமான வெற்றிகளை எதிர்பாத்தோம். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தினகரன் கூறியிருக்கிறார். 


 

 

மம்தா பானர்ஜி சொன்னபடி பல குளறுபடிகள் இந்த தேர்தலில் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறது. தேனியில் மட்டும் எப்படி அதிமுக வெற்றி பெறும்? தேனி தொகுதிக்குள் வரும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக எப்படி தோல்வி அடையும்? 
 

எங்களது வேட்பாளர்கள் சொல்வது என்னவென்றால் பல பூத்துக்களில் பூஜ்ஜியம் காண்பிக்கிறது என்றுதான். இதுவரை நாங்கள் கணக்கெடுத்துள்ளபடி 1800 பூத்துக்களில் பூஜ்ஜியம் என காண்பிக்கிறது. வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குகள் கூட எங்கே சென்றது? எங்கள் கட்சியின் தாம்பரம் நாராயணன் உள்பட எல்லோரும் கேட்டு வருவது அதைத்தான். அமமுக வரக்கூடாது என்று திட்டமிட்டு செய்துள்ளனர். 
 

கடைசி நேரத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது பரிசுப் பெட்டகம் சின்னம். இதனை கொண்டு சேர்க்க காலம் குறைவாக இருந்தது. அப்படி இருந்தும் கொண்டு சேர்த்தோம். நாங்கள் தோற்கவில்லை. பாஜகவை எதிர்த்து பேசியதால் திட்டமிட்டு நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். 


 

 

1996ல் பர்கூரில் ஜெயலலிதா தோற்றார். அப்போது சில நிர்வாகிகள் கட்சியைவிட்டு சென்றனர். போகிறவர்கள் போகட்டும் என்றுதான் ஜெயலலிதா சொன்னார், அதற்காக அவர் சோர்ந்துவிடவில்லை. அவரது தலைமையை ஏற்று தொண்டர்கள் அப்படியே இருந்தனர். அதற்கு பிறகு தேர்தலை சந்தித்தார். வெற்றி பெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 அதிமுக எம்பிக்களை பெற்றுக்கொடுத்தார். 2011ஐ தொடர்ந்து 2016 சட்மன்றத்தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை கொடுத்தார். அதைப்போலவேதான் தினகரனும் சொல்லுகிறார் போகிறவர்கள் போகட்டும் என்று. சில நிர்வாகிகள்தான் செல்கிறார்களே தவிர தொண்டர்கள் செல்லவில்லை. ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 10 வருடமாக கடுமையாக போராடித்தான் வந்தார். திமுக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றுகூட வரவில்லை அதற்காக திமுக சோர்ந்துவிட்டதா? 7 வருடமாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்பதால் திமுக சோர்ந்துவிட்டதா? 

 

CR Saraswathi


 

நாங்கள் கட்சி தொடங்கி 13 மாதங்கள்தான் ஆகிறது. தொண்டர்களுடன் தமிழக அரசியலில் தொடர்ந்து பயணிப்போம். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை சந்திப்போம், வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலை சந்திப்போம், உள்ளாட்சித் தேர்தலையும் சந்திப்போம். இதற்கிடையில் கட்சி தலைமை தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் அறிவிக்கும். அதனை நடத்துவோம். அதிமுக - அமமுக இணையுமா? இணையாதா? என்பதெல்லாம் தினகரன், சசிகலா எடுக்கக்கூடிய முடிவு. அவர்கள் தலைமையை ஏற்றுள்ள நாங்கள் அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம்''. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

”ஒன்றிய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்கப்படும்” - திமுக வேட்பாளர் உறுதி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
DMK candidate KE Prakash assured that weakened textile sector will be revived

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டெடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், தில்லைநகர், அக்ரஹாரம், பெரியார்நகர், ஆண்டிக்காடு, சுபாஸ்நகர், பழனியப்பாநகர், ஒட்டமெத்தை, உடையார்பேட்டை, நாராயணன்நகர், கொத்துக்காரன்காடு, வெடியரசன்பாளையம், ஆலாம்பாளையம், சின்னகவுண்டன்பாளையம், வெங்கடேசபுரம், எஸ்.பி.பி. காலனி, அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், கரட்டாங்காடு, வஉசி நகர், முனியப்பன்நகர், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில்  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, சமையல் கேஸ் விலையானது தற்போது இருப்பதை விட பாதியாக குறைக்கப்படும். மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை மிகவும் நலிவடைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த ஜவுளித்தொழிலை விட்டு வெளியேறி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள், திட்டங்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.

எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உடனடியாக நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டு மேம்படுத்தவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரயான், பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டன் மட்டும் ரூ.160 கோடி ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. இதை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறிகள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல விவசாய நிலங்களைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப் லைன் போன்ற திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோரங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்.

ஏழைக்குடும்பங்களின் வறுமையைப் போக்கிட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதோடு விவசாய தொழிலாளர்களின் 100 நாள் திட்டமானது 150 நாள்களாகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும். இவ்வாறு கே.இ.பிரகாஷ் பேசினார்.

வாக்குசேகரிப்பின் போது மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.