Skip to main content

தி.மு.க. வழியில் அ.தி.மு.க ! - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்!

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

தமிழகத்தின் ஆகப்பெரிய கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் வேட்பாளர்கள் தேர்வில் அதீத கவனம் செலுத்தியிருந்தாலும் வாரிசுகளுக்கு வாய்ப்புத் தருவதில் சளைக்கவில்லை. பொதுவாக, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு கட்சிகளிலுமே அதிருப்திகள் வெடிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தி.மு.க.வில் அமைதியையும் அ.தி.மு.க.வில் கொந்தளிப்பையும் உருவாக்கியிருக்கிறது வேட்பாளர் தேர்வு.
 

ravindranath ops

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசியபோது, ""கட்சியின் சீனியர்கள், மக்களோடு தொடர்புடைய கட்சி உழைப்பாளிகள், வாரிசுகள் என பல வகையிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பார்லிமெண்டில் அனுபவம் பெற்றவர்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோட்பாட்டில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம் உள்ளிட்ட சீனியர்களுக்கு வாய்ப்புத் தந்துள்ளார் ஸ்டாலின். அதேசமயம், பொள்ளாச்சி சண்முகசுந்தரம், திண்டுக்கல் வேலுச்சாமி, காஞ்சிபுரம் செல்வம், நெல்லை ஞானதிரவியம் போன்ற உழைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சபரீசன் மேற்பார்வையில் இயங்கும் ஓ.எம்.ஜி.யின் சிபாரிசில் 4 பேருக்கு சீட் தந்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், அவர்களும் தேர்தலை சமாளிக்கும் திறன் உள்ளவர்களா என பார்த்துதான் கொடுக்கப்பட்டுள்ளது.

thamalachi thangapandiyan

வாரிசுகளுக்கு வாய்ப்புத்தரக்கூடாது என கட்சியில் கருத்து மோதல் வெடித்திருந்த நிலையில், கலைஞரின் மகள் கனிமொழி (தூத்துக்குடி), துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் (வேலூர்), ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி (வடசென்னை), முரசொலிமாறனின் மகன் தயாநிதிமாறன் (மத்தியசென்னை), தங்கம் தென்னரசு சகோதரி தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை), பொன்முடி மகன் கௌதமசிகாமணி (கள்ளக்குறிச்சி) என 6 பேருக்கு சீட்டு தரப்பட்டுள்ளது. இதிலும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் சரியான வேட்பாளர்கள்தான். இதில் துரைமுருகன் மற்றும் பொன்முடியின் வாரிசுகள் குறித்துத்தான் கட்சிக்குள் எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அவர்களது வாரிசுகளைத் தவிர்த்து, வேறு ஒருவரை தேர்வு செய்யும்போது வெற்றிக்கு உறுதி இல்லாத நிலை. அதேசமயம், பொள்ளாச்சி தொகுதிக்கு பொங்கலூர் பழனிச்சாமி தனக்கு அல்லது தனது மகன் பைந்தமிழ்பாரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டார். அதேபோல இன்னும் சில தொகுதிகளுக்கு பலபேர் கேட்டனர். அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை ஸ்டாலின். 

kanimoli

இடைத்தேர்தல் நடக்கும் கலைஞரின் திருவாரூர் தொகுதியில் கலைஞரின் குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் நிற்க வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது அதை மறுத்து பூண்டி கலைவாணனுக்கு வாய்ப்புத்தந்துள்ளார் ஸ்டாலின். ஆக, வாரிசுகளுக்கு வாய்ப்பு தரப்பட்டது என்பது வெறும் வாரிசு என்பதற்காக மட்டுமல்ல. அதேபோல, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் பெரம்பூர் ஆர்.டி.சேகர், பெரியகுளம் சரவணக்குமார், பரமக்குடி சம்பத்குமார், ஆண்டிப்பட்டி மகாராஜன் உள்பட 12 வேட்பாளர்கள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தேர்வு இந்தமுறை 90 சதவீதம் ஆரோக்கியமாக இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.  
 

jayavardhan

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்ப தற்காகவும் மா.செ.க்கள் மற்றும் கட்சியின் சீனியர்களுடன் 17-ந் தேதி மாலையில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தி னார் பழனிச்சாமி. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படி வேட்பாளர்களை தேர்வுசெய்திருந்த எடப்பாடி, அதனை வாசிக்க, மா.செ.க்கள் பலரும் சிபாரிசு செய்திருந்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததால் கோபம் கொப்பளித்தது. ""இது லிஸ்ட்டே இல்லை. எங்களது சிபாரிசுகளைவிட உளவுத்துறை சிபாரிசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா?'' என எகிறினார்கள். 

rajan chellappa

மதுரையை முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசனுக்கு தர வேண்டுமென அமைச்சர்கள் உதயக்குமார், செல்லுர்ராஜு மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு செய்தனர். அப்போது வெகுண்டெழுந்த ராஜன்செல்லப்பா, ""என் மகனுக்குத்தான் (ராஜ்சத்யன்) கொடுக்க வேண்டும். இல்லைன்னா இங்கு நடக் கிறதே வேற''’என மல்லுக்கட்டினார். தடித்த வார்த்தைகளை யும் பயன்படுத்த, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் இதனைக் கண்டித்தனர். ஆனாலும் பொறுமையிழந்த ராஜன்செல்லப்பா, ""உங்க மகனுக்கு சீட் வாங்கிட்ட தைரியத்துல நீங்க பேசறீங் களா? உங்க மகனுக்கு சீட் வேணாம்னு சொல்லுங்க. நானும் கேட்கலை'' என ஓ.பி.எஸ்.ஸிடம் ஆவேசம் காட்ட, அமைதிப் படுத்த முயற்சித்தார் எடப்பாடி. அவரிடமும் எகிறினார் ராஜன் செல்லப்பா. அமைச்சர் உதயக்குமாருக்கும் ராஜன்செல்லப்பா வுக்கும் அடிதடி நடக்குமளவுக்கு மோதல் வெடித்தது. 
 

பாப்பிரெட்டிப்பட்டி அல்லது ஓசூர் இடைத்தேர்தலில் போட்டியிட கடுமையாக மோதினார் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமி. ஆனால், "கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுங்கள்' என பிடிவாதமாக எடப்பாடி நின்றதால் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர் ஜெயித்துவிட்டால் அமைச்சர் பதவி கேட்டு அடம்பிடிப்பார் என்ப தாலேயே அவரை எம்.பி. தொகுதிக்கு தள்ளிவிட்டுள்ளார் எடப்பாடி. 
 

திருவண்ணாமலையை முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ண மூர்த்திக்கு ஒதுக்குவதாக எடப்பாடி சொல்ல, இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், "சீட்டு களை விலைக்கு விற்காதீர்கள்' எனவும் கோஷமிட்டனர். "அக்ரிக்கு ஒதுக்கினால் நாங்கள் ராஜினாமா செய்வோம்' என மா.செ.க்கள் மிரட்டியும் பார்த் தார்கள். ஆனாலும் அக்ரிக் குத்தான் டிக் அடித்தனர் எடப்பாடியும் ஓ.பி.எஸ். ஸும். வடசென்னை தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்த சிட்டிங் எம்.பி. வெங்கடேஷ்பாபு, அத்தொகுதி தே.மு.தி.க. வுக்கு ஒதுக்கப்பட, ""என் தொகுதியை என்னிடம் விவாதிக்காமல் கூட்டணி கட்சிக்கு எப்படி ஒதுக்க லாம்'' என மல்லுக்கட்டி னார். ஆனாலும் அவரது சொல் செல்லுபடியாக வில்லை. இடைத்தேர்தல் நடக்கும் பெரம்பூர் தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டுமென வெங்க டேஷ்பாபு கொடி பிடிக்க... மதுசூதனனும் மா.செ. ராஜேஷும் கடும் எதிர்ப்புக் காட்டினார்கள். இதனால், வெங்கடேஷ்பாபுவுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை. பெரம்பூரை ராஜேஷ் கைப்பற்றினார். 
 

இந்த ரகளைகளை நம்மிடம் சுட்டிக்காட்டிய அ.தி.மு.க. மா.செ.க்கள், ""இப்படி அ.தி.மு.க.வின் பெரும்பாலான தொகுதிகளில் மோதல் வெடிக்க, 5 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் எடப்பாடி யும் ஓ.பி.எஸ்.ஸும் கட்சி தலைமையகத்தைவிட்டு இரவு 10 மணிக்கு வெளியேறினார்கள். தனது வீட்டில் ஓ.பி.எஸ். மற்றும் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி விவாதிக்க, மதுரையை மட்டும் சேஞ்ச் பண்ணி, ராஜன்செல் லப்பா மகனுக்கு கொடுத்துட்டு மற்றபடி அப்படியே ரிலீஸ் செய் திடலாம் என முடிவெடுத்தனர். ஆனால், வேட்பாளர்கள் பட்டி யலை எடப்பாடி அறிவிக் காமல், தலைமைக்கழக நிர்வாகி மூலம் பட்டியலை ரிலீஸ் செய்ய வைத்தார் எடப்பாடி. அ.தி.மு.க.வின் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு கள் இருந்த நிலையில், அதனை மாற்றியமைக் காமல் அப்படியே ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் கொந்தளிப்புகள் உருவாகி யுள்ளது'' என்கிறார்கள் காட்டமாக! தி.மு.க.வில் 6 வாரிசுகள் தொகுதியை கைப் பற்றிய நிலையில்... குடும்ப அரசியலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அ.தி. மு.க.வில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், பி.ஹெச். பாண்டியன் மகன் மனோஜ்பாண்டியன் ஆகிய 4 பேர் சீட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
 

கலைஞர் மற்றும் ஜெய லலிதா ஆகிய இரண்டு தலைவர்கள் இல்லாத நிலையில் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி, வாரிசுகளின் ஆதிக்கம், பெருந் தலைகளின் மோதல்கள் என நடக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் தான் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளின் வலிமையை நிரூ பிக்கப் போவதால் இப்போதே தகிக்கத் துவங்கியிருக்கிறது. 
 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.