Skip to main content

‘எங்களதாண்டா ஈசியா ஏமாத்திடுறீங்க’- இந்தியாவை திரும்பிபார்க்கவைத்த 90ஸ் கிட்ஸ்

Published on 06/02/2019 | Edited on 06/02/2019
ricky


#90sKidsRumour என்ற ட்விட்டர் ஹேஷ்டேக் நேற்று மதியம் சென்னை அளவில் ட்ரெண்டாக தொடங்கியது. அதன் பிறகு பல 90 ஸ் கிட்ஸ்களும் தாங்கள் நம்பி ஏமாந்த புரளிகளை இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஷேர் செய்ய ஆரம்பித்தனர். அதன் பிறகு அந்த ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடத்திற்கு ட்ரெண்டாகியது. தமிழகத்தில் ஆரம்பித்த இந்த ஹேஷ்டேக் வட இந்தியா வரை பரவியது. வட இந்திய 90ஸ் கிட்ஸ்களும் தாங்கள் நம்பி ஏமாந்த புரளிகளை இதில் பதிவிட ஆரம்பித்தனர். அவையும் பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட புரளிகளாகவேதான் இருந்தன. நம்மிடம் கூறப்பட்ட பல புரளிகள் அவர்களிடமும் கூறப்பட்டுள்ளன என்பது 90ஸ் கிட்ஸ்களின் பெரும் ஆறுதலாக அமைந்தது. அப்படி 1990களில் சிறுவர்களாக இருந்தவர்கள் நம்பிய பொய்களை இந்த ஹேஸ்டேகுடன் இணைத்து பதிவிட்டனர். இந்த 90ஸ் கிட்ஸ் என்றாலே சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற வண்ணம்தான் சமூக வலைதளங்களில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். யார் இந்த 90ஸ் கிட்ஸ் என்று பெரும் பிரச்சனைகள் கூட சில நண்பர்கள் வட்டாரத்தில் வருகிறது என்றால் பாருங்களேன். 
 

நேற்று இந்த ஹேஸ்டேகில் சொல்லப்பட்ட ஒரு சில புரளிகள் என்ன என்று பார்ப்போம். இதில் பல புரளிகள் 90ஸ் கிட்ஸை அவர்களது கடந்த காலத்திற்கே அழைத்து சென்று அவர்களை மேலும் குஷிப்படுத்திருக்கும். இதை பார்த்த 20ஸ் கிட்ஸிற்கு என்னடா இது இவ்வளவு மக்கு பசங்களாவா இந்த 90ஸ் கிட்ஸ் இருந்திருக்கிறார்கள் என்று தங்களுக்குள்ளேயே கேட்டிருப்பார்கள். இப்போதெல்லாம் பிறக்கிற குழந்தையே எதை சொன்னாலும் நம்பாமல், கேள்விமேல் கேள்விகள் கேட்கிறது. ஆனால், அப்போதெல்லாம் அப்படியா நம்மை விட பெரியவர்கள் யார் சொன்னாலும் அதை நம்பிவிட வேண்டியதுதான். சரி நேற்று ட்ரெண்டான 90ஸ் கிட்ஸின் புரளிகள் என்ன என்று பார்ப்போம்...

 

‘பழங்களை சாப்பிடும்போது அதன் விதையை சாப்பிட்டால் வயிற்றில் மரம் வளரும்’
 

‘பெண்ணுக்கு முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும்’
 

peacock


‘மயில் இறகை புத்தகத்திற்குள் வைத்தால் அது குட்டிப்போடும்’
 

‘பூமரை முழுங்கிவிட்டால், இறந்துவிடோம்’
 

‘நமக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால், சக்திமான் (சில நேரம் பவர் ரேஞ்சர்ஸ்) நம்மை காப்பாற்றுவார்’
 

‘கிரிக்கெட்டர் நவ்ஜோதித் சிங் சித்துவிற்கு தவறாக நடுவர் அவுட் தந்ததால், ஸ்டம்பால் குத்தி நடுவரை கொன்றுவிட்டார்’
 

‘நடிகர் சரத்குமாரும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் நெருங்கிய நண்பர்கள்’
 

‘ஆம்னி வேன் என்றால் பிள்ளையை பிடித்துவிட்டு செல்பவர்கள்’
 

undertaker


‘அண்டர்டேக்கருக்கு 7 உயிர்’
 

‘அண்டர்டேக்கரும் கேனும் அண்ணன் தம்பி’
 

‘பென்சிலை சீவி தண்ணீரில் போட்டால் ரப்பர் வரும்’
 

‘பன்னி கறியில் உருவாக்கப்படுவதுதான் பூமர்’
 

‘ரிக்கி பாண்டிங், ஸ்பிரிங் பேட் வைத்துதான் பேட்டிங் சிறப்பாக ஆடினார். அதனால்தான் அவர் 2003 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டிச் சென்றனர்’
 

‘2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ரீ-மேட்ச் நடக்கும்’
 

‘தலையில் இரண்டு சுழி இருப்பவருக்கு, இரண்டு திருமணம் நடக்கும்’

 


மேலும் இதுபோல பல புரளிகள் அப்போது வலம் வந்துகொண்டிருந்தன. அதை தற்போது நினைவில் வைத்திருந்தால் நீங்களும் பகிர்ந்து உங்களுடைய சிறுவயதிற்கு பயணத்திவிட்டு வாருங்கள்...

 

 

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.