Skip to main content

அதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை?

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

adani

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, பேட்டிங் ஆடி வந்தது. போட்டியின் 7-ஆவது ஓவரின்போது மைதானத்துக்குள் நுழைந்த இரு ஆஸ்திரேலியர்கள் 'எஸ்.பி.ஐ அதானிக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன் வழங்காதே!' என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி இந்திய ஸ்டேட் பேங்கிற்கு கோரிக்கை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு நிமிடங்கள் இவர்களால் ஆட்டம் தடைப்பட்டது. மைதானத்தின் பாதுகாவலர்கள் இருவரையும் அப்புறப்படுத்தியதையடுத்து, போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

 

அந்த இரு ஆஸ்திரேலியர்கள் எதற்காக மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அதானிக்கு கடன் வழங்காதே என்கிற பதாகையை ஏந்தி வந்தனர் என்பதற்குப் பின்னால் பழங்குடியினர் மற்றும் சூழலியலாளர்கள் கிட்டத்தட்ட பத்துவருடப் போராட்டம் அடங்கியிருக்கிறது. இவர்கள் இத்தனை ஆண்டுகளாக குயின்ஸ்லாந்த் அருகே கலீலி ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள கார்மைக்கேலில் அமைய இருக்கும், நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராகப் போராடி வருபவர்கள். குவின்ஸ்லாந்தின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம், உலகின் மிகப்பெரிய சுரங்கங்களுள் ஒன்று. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், 'கார்மைக்கேல்' சுரங்கம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தை, குவின்ஸ்லாந்து மாகாண அரசு முன்மொழிந்தது. இதுமட்டுமல்லாமல், 'ரயில் பாதை' அமைக்கும் ஒரு திட்டம் என இவ்விரு திட்டங்களும் முக்கியமான திட்டங்களாகக் கருதப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து, முதலில் அறிவிக்கும்போது, சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலக்கரி சுரங்கம் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவித்தது. அதனையடுத்து அது, 90 ஆண்டுகளானது. கடைசியில் 2016 -ஆம் ஆண்டு 60 ஆண்டுகள் என்று முடிவுக்கு வந்தது. 

 

தொடக்கத்திலிருந்து மக்கள் மத்தியிலும், சூழலியலாளர்கள் மத்தியிலும் பெரும் விமர்சனங்களைப் பெற்று, தடைப்பட்டு தடைப்பட்டு தொடங்கப்பட்டது, இந்த நிலக்கரி சுரங்கத் திட்டம். இந்தச் சுரங்கத்திலிருந்து ஒருவருடத்திற்கு, 10 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கப்படும் என்று, 'அதானி நிலக்கரி நிறுவனம்' இப்பணியைத் தொடங்கும் முன்பு தெரிவித்தது. 2014 -ஆம் ஆண்டிலிருந்து, இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தி வரும் அதானி குழுமம், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதியைப் பெற்றுள்ளது. அது என்ன மாதிரியான நிபந்தனைகள் என்றால், 'நிலத்தடி நீர்', 'அழிவின் விளிம்பில் இருக்கும் மிருகங்களைப் பாதுகாத்திட வேண்டும்' போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும்போது கண்டிப்பாக, சுற்றுச்சூழல் கெடும் என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். அதானியின், இந்தத் திட்டத்தை எதிர்த்து 'ஸ்டாப் அதானி' என்று ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

adani 2

 

நிலக்கரி எடுக்கும்போது, கார்பன் டை ஆக்சைட் அதிகமாக வெளிப்படுவதால், அது பெரிதும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல, அங்கிருந்து எடுக்கப்படும் நிலக்கரியை அருகிலிருக்கும் துறைமுகத்திற்கு எடுத்துச்செல்ல புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதனால், 'ரீஃப்' என்று சொல்லப்படும் கடல்நீர் பாறை பெரிதும் பாதிக்கப்பட இருக்கிறது. இதனால், அந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், இந்த ஒரு நிறுவனம் அனுமதி பெற்றுவிட்டால், இதனையடுத்து ஆறு நிலக்கரி சுரங்கம் தொடங்கப்படும், இதனால் எங்களின் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று இந்த நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

cnc

 

இதுவரை, அதானி குழுமத்திற்கு நிதியுதவி செய்யவிருந்த நிறுவனங்கள் பல இந்த மக்களின் வலுவான எதிர்ப்பால் பின்வாங்கிவிட்டனர். இதனால், 16 பில்லியன் பட்ஜெட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2 பில்லியனாகக் குறைத்துக்கொண்டது அதானி குழுமம். கடந்த 2019 -ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் நிலக்கரி சுரங்கத்தை தொடங்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, 2021 -ஆம் ஆண்டு முதல் சுரங்கத்திலிருந்து நிலக்கரி எடுக்கும் பணி தொடங்கும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், ஒரு பக்கம் பழங்குடியினர், சூழலியலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். வாங்கன் மற்றும் ஜாகலிங்கேஜ் பழங்குடியினர், சுரங்கத்திற்குச் செல்லும் வழிப்பாதையை முடக்கி யாரையும் அந்தப் பக்கம் ஐந்து நாட்களுக்குச் செல்ல முடியாமல் செய்து, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். 

 

மைதானத்திற்குள் மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியேவும் 'ஸ்டாப் அதானி' என்கிற அமைப்பு, 'அதானிக்கு கடன் வழங்காதே!' என்று பேனர்களை வைத்துக்கொண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர்...

 

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.