ஹிந்தி மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி `12 சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு போட்டியாளராக உள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் தனது சக போட்டியாளரான அனுப் ஜலோடாவிடம் ஸ்ரீசாந்த் சச்சினை பற்றி பகிர்ந்துகொண்டார். அப்போது,” சச்சின் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2011 உலகக்கோப்பை நடந்து 1-2 ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சச்சினிடம் என் பெயரை தவிர வேறு எல்லாரின் பெயரும் அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால், இறுதியில் சச்சின் அவரே என் பெயரை குறிப்பிட்டு என் பங்களிப்பு முக்கியமானது என்றார், அதைக் கேட்டவுடன் மனம் உடைந்து நெகிழ்ச்சியில் அழுதுவிட்டேன்” என்றார்.
பிக்பாஸில் சச்சினை பற்றி குறிப்பிட்டு அழுத முன்னாள் வீரர்...
சார்ந்த செய்திகள்
Next Story
விஜய் சேதுபதி படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் காதுவாக்குல படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முஹம்மது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த்-க்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு முடிவடைந்ததையடுத்து, தற்போது மாநில கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே அவர் டிவி நிகழ்ச்சி மற்றும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுயிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
7 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்!
சூதாட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, 7 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீசாந்த் முதல்முறையாக கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்க இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், ஐ.பி.எல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமானது. அதன்பின், அவர் 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பி.சி.சி.ஐ தடைவிதித்தது. இத்தடைக்காலத்தை ஸ்ரீசாந்த் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார்.
இந்நிலையில், கேரள கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் 20 ஓவர் தொடரில் ஸ்ரீசாந்த் பங்கேற்க இருக்கிறார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இவர் கே.சி.எ டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
டிசம்பர் மாத நடுவில், இத்தொடரை துவக்கி, ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் முடிக்க கேரள கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் முறையான அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன.