Skip to main content

ஜோ ரூட்டுடன் மோதும் ரிஷப் பந்த்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

pant - root

 

சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஒரு ஆண்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கிவருகிறது. இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம், மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களைப் பாராட்டும் வகையில், மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ஜனவரி மாதத்திலிருந்து வழங்க முடிவுசெய்துள்ளது.

 

தற்போது இந்த விருதுக்கு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றக் காரணமாய் விளங்கிய இந்திய வீரர் ரிஷப் பந்த், இலங்கையுடனான போட்டியில் சிறப்பாக விளையாடி ரன் குவித்த ஜோ ரூட், ஜனவரி மாதம் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி மூன்று சதம் அடித்த, அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

 

தற்போது பரிந்துரைக்கப்பட்ட வீரர்களில், விருதுக்குத் தகுதியான வீரர் வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மூத்த விளையாட்டு ஊடகவியாளர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஐசிசி ஹால் ஆஃப் பேமில் (icc hall of fame) இடம்பெற்றவர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும், கிரிக்கெட் ரசிகர்களும் வாக்களித்து மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்யவுள்ளனர்.