Skip to main content

இரண்டாக உடைந்த ஸ்டம்ப்!! தீவிர பயிற்சியில் பந்துவீச்சாளர்...!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

stump

 

 

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணி வீரர்களும் வெற்றி முனைப்போடு தீவிர பயிற்சியில் உள்ளனர். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெறும் தொடர் என்பதால் அனைத்து அணி நிர்வாகமும் அவ்வப்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் காணொளிகள், புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

 

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி வீரர்களுடன் இணைந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடும்போது அவர் வீசிய பந்து ஒன்று ஸ்டம்பை இரண்டாக உடைத்துள்ளது. அந்த காணொளியை மும்பை அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

ரோஹித்ஷர்மா மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்த பேருந்து மீது சிக்ஸர் அடித்தது, தோனி மைதானத்திற்கு வெளியே அடித்த பந்து காணாமல் போனது, ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்து ஸ்டம்பை இரண்டாக உடைப்பது போன்ற காணொளிகள் 19-ம் தேதி நடைபெற இருக்கிற சென்னை, மும்பை போட்டி குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.