Skip to main content

டி-20 உலகக்கோப்பை; அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
indian team amazing win in T-20 World Cup

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த நிலையில், இன்று (29-06-24) நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியோடு மோதும் இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 5 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்து 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் ஹோலி, 59 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடித்து 76 ரன்கள் எடுத்து அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். அக்ஸர் படேல் 47 ரன்கள் எடுத்தும், சிவம் துபே 27 ரன்கள் எடுத்தும் அவுட்டானார்கள். இறுதியாக இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இந்திய அணிக்கு எதிராக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா அணியின் மகாராஜ் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். மேலும், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அதில், குயின்டன் டி காக் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் எடுத்து 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 2 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் அடித்து 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் அடித்து 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். இதன் மூலம், டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 

 

Next Story

“நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும்” - அமிதாப் பச்சன் உருக்கம் 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024

 

Amitabh Bachchan said about t20 world cup 2024

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம், டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். 

இந்த நிலையில், நான் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பிளாக் (Blog) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா!!! T20 WORLD CUP 2024. உற்சாகம், உணர்ச்சிகள் மற்றும் பயம் என எல்லாம் முடிந்தது. எப்போதும் போல இந்த இறுதிப் போட்டியை நான் டி.வியில் பார்க்கவில்லை. நான் இறுதிப் போட்டியைப் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடுகிறது. இனி எதுவும் எனது பெருமூளைக்குள் நுழையாது. இந்திய அணியினர் சிந்திய கண்ணீருக்கு இசைவாக நம் கண்களிலும் நீராய் ஓடியது” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொலைக்காட்சியில் இந்திய அணி விளையாடும் போட்டியை அமிதாப் பச்சன் பார்த்தால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுவிடும் என்கிற தோற்றம் ஒன்று உலாவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Prize money announcement for Indian cricket team

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா-  இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே உலகக் கோப்பை 2024-ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா  ஆகிய மூவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.