Skip to main content

18 ரன்களில் ஆல்-அவுட்.. 12 நிமிடங்களில் சேஷிங்.. 152 ஆண்டுகால வரலாறு மாறியது!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
bechan

 

 

 

ஒரு விளையாட்டில் கடைசி நிமிடத்தில் கூட எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அது எந்த விளையாட்டாக இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது. அந்த வகையில், கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு அணி 18 ரன்களில் ஆல் அவுட் ஆனது நடந்துள்ளது.
 

இங்கிலாந்தில் உள்ளது கெண்ட் கிரிக்கெட் க்ளப். இந்த க்ளப்பின் மூலமாக ஷெபர்ட் நேம் கெண்ட் கிரிக்கெட் லீக் நடைபெற்று வந்தது. இதில் பெக்கன்ஹாம் மற்றும் பெக்ஸ்லீ கிரிக்கெட் க்ளப்புகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த பெக்கன்ஹாம் கிரிக்கெட் அணியின் வீரர்கள், ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் நான்கு மட்டுமே. முழுமையாக 49 நிமிடங்கள் பேட்டிங்கில் ஈடுபட்ட பெக்கன்ஹாம் அணி 18 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
 

 

 

அதன்பிறகு களமிறங்கிய பெக்ஸ்லீ அணி, வெறும் 12 நிமிடங்களில் வெற்றி இலக்கை எட்டியது. முதல் தர கிரிக்கெட்டில் 152 கால நீண்ட வரலாறு கொண்ட பெக்கன்ஹாம் அணி, மிகக்குறைவான ரன்களில் ஆல்-அவுட் ஆவது இதுவே முதன்முறையாகும். அதுவும் பெக்ஸ்லீ அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் வேகமாக பரவிய நிலையில், பெங்களூரு அணியின் 49 ரன்களை இந்த போட்டியின் முடிவோடு இணைத்து மீம்ஸ்கள் வலம்வரத் தொடங்கியுள்ளன. 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.