இந்தியா ஆஸ்திரேலியா இடையே மூன்றாவது டி20 போட்டி இன்று!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி போட்டி இது. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் வைத்து இரவு 8.00 மணிக்கு தொடங்கவுள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
முதல் டி20 போட்டியில் சுலபமாக ஜெயித்திருந்தாலும், இந்திய அணியால் இரண்டாவது ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கைகளே மேலோங்கியிருந்தது.
இந்நிலையில், இன்று நடக்கும் போட்டிதான் தொடரை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.