Skip to main content

உலகக்கோப்பையில் மட்டுமே சந்தித்துக் கொள்ளும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள்!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

India-Pakistan teams to meet only in World Cup!

 

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை இன்று (24/10/2021) எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைத் தொடர்களில் இதுவரை பாகிஸ்தானிடம் தோல்வியே சந்திக்காமல் வலம்  வருகிறது இந்திய அணி. தற்போது பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராக இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குறித்து விரிவாகப் பார்ப்போம். 

 

20 ஓவர் போட்டிகளுக்கான தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி முடித்த கையோயுடன், உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்குகின்றன இந்திய வீரர்கள். 

 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷண், ரிஷப் பந்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அணியில் உள்ளனர். இவர்களில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரிலும் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. 

 

புவனேஸ்வர் குமார், ஜஸ்பீரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி ஆகிய பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். இவர்களில் பும்ரா, ஷமி, வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்து வீச்சு அமீரக ஆடுகளங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றன. 

 

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மிகுந்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளனர். குறைந்த ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்ப்போம்.

 

பாகிஸ்தான் அணி உடனான தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்கும் நிலை ரசிகர்களுக்கு ஏற்படுகிது. இதனால், இந்த போட்டிகளை இரு நாட்டு வீரர்களும் கவுரவ பிரச்சனைகளாகவே கருதி களம் காண வேண்டியுள்ளது. 

 

இவ்விரு அணிகளும் மொத்தம் 132 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது. 55 போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. 4 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் கைவிடப்பட்டிருக்கின்றன. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலகட்டம் வரை பாகிஸ்தான் கை சற்று ஓங்கியிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பதிலடி சற்று பலமாகவே உள்ளது. 

 

உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி வரலாறு பிரமிக்க செய்கிறது. உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டுள்ள 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிப் பெற்றுள்ளது. அதேபோல், 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் மோதிய 5 போட்டிகளில், இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றிப் பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. 

 

கடந்த 2007- ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது இந்திய அணி. கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவ்விரு அணிகளும் சர்வதேச போட்டியில் களம் கண்டன. 

 

பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா அணி மற்றும் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை முக்கிய சுற்றில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. 

 

Next Story

ஆட்டத்தின் திக் திக் நிமிடங்கள்; டென்ஷன் ஆன ரசிகர்கள்! 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

south africa beat pakistan in world cup cricket

 

சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின் 26வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் நேற்று (27ம் தேதி) மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

 

இதில், அதிகபட்சமாக பாபர் அசாம் 65 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் எடுத்து 50 ரன்கள் குவித்து அவுட்டானார். அதை தொடர்ந்து, செளத் ஷகீல் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 52 ரன்களோடு அவுட்டானார். மேலும், தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர். 

 

இதனை தொடர்ந்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தெம்பா பவுமா 28 ரன்களையும், டி காக் 24 ரன்களையும் எடுத்து அவுட்டானார்கள். அடுத்தடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் மிகவும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில்,  நிதானமாக விளையாடிய மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு  271 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில், பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம், உசாமா மிர் மற்றும் ஹரிஸ் ரஃப் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இந்த உலக கோப்பை லீக் போட்டியில் 6 முறை விளையாடிய பாகிஸ்தான் அணி 2 வெற்றியையும், 4 தோல்விகளையும் சந்தித்தது. கடந்த 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியோடி மோதிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அணி குறித்து அந்த அணியின் முன்னால் நட்சத்திர வீரர் வாசிம் அக்ரம் தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருந்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஸ்குவாடுக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆனால் தற்போது அது பல் இல்லாத பாம்பு போல் உள்ளது. 

 

இரு விக்கெட்களை மட்டுமே இழந்து 280 ரன்களை எடுப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால், இதனை ஆஃப்கானிஸ்தான் அசால்டாக செய்திருக்கிறது. பிட்ச் ரிப்போர்ட்டை காரணம் சொல்ல முடியாது. வீரர்களின் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். மூன்று வாரமாக நீங்கள் விளையாடவில்லை. நான் தனிப்பட்ட முறையில் வீரர்களின் பெயர்களைச் சொன்னால் அவர்களுக்கு முகம் வாடும். இவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல் தற்போது இவர்களுக்கு எந்த சோதனையும் வேண்டாம். நீங்க உங்க நாட்டுக்காக விளையாடுறீங்க. தொழில் ரீதியாக நீங்கள் விளையாட பணம் பெறுகிறீர்கள்” என்று தெரிவித்திருந்தார். 

 

அவர் பேசிய கருத்து கிரிக்கெர் ரசிகர்கள் மிகவும் பேசுபொருளாக மாறியிருந்தது. மேலும், பாகிஸ்தான் அணி வீரர்கள் மத்தியில் கவலை அளித்திருந்தது. இந்த சூழலில், இந்த லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று நோக்கத்தில் பாகிஸ்தான் அணி இறுதி வரை போராடியது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த உலக கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியை காண ரசிகர்கள் பலரும் வந்து ஆரவாரம் செய்தனர். இதில் விளையாடிய, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் என இரு அணிகளுக்கும் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவை தந்தனர். இந்த சூழலில், எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை ரசிகர்கள் பதட்டமாக இருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி வெற்றுள்ளது. 


 

Next Story

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம்; ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

A policeman was involved in an argument with a fan for 'Pakistan Zindabad' slogan;

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் 14ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில் நேற்று (20-10-23) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரிடம் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் 18வது லீக் ஆட்டமான நேற்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தன. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தது. 

 

அப்போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கங்களை எழுப்பி வந்தார். இதனை பார்த்த அங்கிருந்த போலீஸார் ஒருவர் அவரிடம் வந்து, ‘மைதானத்தில் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தான் எழுப்ப வேண்டும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது’ என்றும் கூறினார். இதில், அதிர்ச்சியடைந்த அந்த ரசிகர், “பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் போது நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பாமல் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்களையா எழுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த காவலர், ‘இந்தியாவுக்கு ஆதரவான எந்த முழக்கங்களை வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பக் கூடாது என்று கூறினார். இதில், இருவருக்கும் மைதானத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போட்டி அமைப்பாளர்கள் அங்கு வந்து அந்த ரசிகரை சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.