Skip to main content

"பெரியார் தாத்தாவை ஏன் எனக்குப் பிடிக்கும்?" - அமெரிக்காவில் பெரியார் புகழ்பாடிய சிறுவர்கள்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

"Why do- I like- Periyar?" - Periyar in - America!

 

தந்தை பெரியாரின் பிறந்த நாள் கடந்த 17-ஆம் தேதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வாழ் தமிழர்கள், பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு (கரோனா காரணாமாக) 'சூம்' செயலியில் சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தினர்.

 

இந்தப் பேச்சுப் போட்டி செப்டம்பர் 20 ஆம் நாள் நடந்தது. 'பெரியார் பன்னாட்டு மய்யம்' ஒரே நேரத்தில் மூன்று 'சூம்' அரங்கங்கள் அமைத்து போட்டியை நடத்தியது. மூன்று நடுவர்கள் - மூன்று ஏற்பாட்டாளர்கள். அமைதியாக, அழகாக நடந்தது.  5, 6, 7 வயதினர் ஒரு பிரிவில். 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மழலைக் குரல் ஆனால் முத்திரை கருத்துகளை "பெரியார் தாத்தாவை ஏன் எனக்குப் பிடிக்கும்" என்று வார்த்தைகளாலும், உடல் அசைவுகளாலும் விளாசினார்கள்.

 

8, 9, 10 வயது பிரிவில், 30க்கும் மேற்பட்டோர். ஆரம்பமே அழகு. "உலகப் பகுத்தறிவாளர்களுக்கு வாழ்த்து" என்று தொடங்கி, "நேரத்தை வீணடிப்பவரைப் பிடிக்காது, அதனால் பெரியார் தாத்தாவைப் பிடிக்கும், முட்டாளைப் பிடிக்காது, அதனால் பெரியார் தாத்தாவைப் பிடிக்கும். பெண்ணடிமை பிடிக்காது, அதனால் பெரியார் தாத்தாவைப் பிடிக்கும் என்று வரிசையாகச் சொல்லி, இவ்வளவும் செய்தவரைப் பிடிக்காமல் இருக்குமா? வாழ்க பெரியார் என்று முடித்தனர் .

 

"Why do- I like- Periyar?" - Periyar in - America!

 

"பெரியார் இன்று ஏன் தேவை" என்ற தலைப்பில் 11 வயதிற்கும் மேற்பட்டோர், ஒவ்வொருவரும் சிறந்த மேடைப் பேச்சாளர்கள்போல் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்காவிலுள்ள கறுப்பினப் போராட்டம் என்று விளாசித் தள்ளி விட்டனர். நடுவர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமாகி விட்டது! பரிசுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது!

 

இவர்கள் கட்டாயம் எதிர்காலத்தில் பெரியார் தொண்டர்கள் மட்டுமல்ல, இங்குள்ள தலைவர்களாகவும் வருவார்கள் என்பதில் அய்யமில்லை! கருத்தும், பேசிய முறையும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இங்கு பிறந்த பிள்ளைகள் இவ்வளவு அழகாகத் தமிழ் பேசியது இங்கு முப்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பள்ளி தொடங்கியதின் பலனை அறுவடை செய்த மகிழ்ச்சி! அனைவரும் ஆங்காங்கே தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாண வர்களே! ஆங்கிலத்தில் பேசியவர்களும் கருத்துகளைத் தெளிவாக எடுத்து வைத்தனர்!

 

Ad

 

இடைவேளைக்குப் பின் பரிசளிப்பு விழாவைப் பறை இசை முழங்கி சிறுவர்கள் தொடங்கி வைத்தார்கள். அறிவுப் பொன்னி நிகழ்ச்சியை நடத்தினார். அமெரிக்காவின் மறைந்த பெண்ணிய, சம உரிமைப் போராளி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரூத் பேடன் கின்சுபர்க் அவர்களின் மறைவிற்கு, நினைவேந்தலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிறுவர் குழுவினர் புரட்சிக் கவிஞரின் "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து"ப் பாடலைப் பாடினார்கள். முதல் பரிசு பெற்றவர்கள் பேசி பரிசைப் பெற்றுக் கொண்டனர். அமெரிக்காவின் நீண்ட காலப் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளருமான வ.ச.பாபு நன்றி உரை ஆற்றினார். அமெரிக்காவில் பெரியார் வாழ்கின்றார்! வாழ்வார்!

 

-சோம. இளங்கோவன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.