Skip to main content

ரஷ்யா விவகாரம்; அமைதி காக்கும் இந்தியா... அமெரிக்கா போடும் திட்டம்

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

US Diplomat says US working to urge India to take 'clear position' on Ukraine-Russia issue

 

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை எடுக்க பைடன் அரசு வலியுறுத்தும் என அமெரிக்கத் தூதரக அதிகாரி டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

 

ஒரு வாரத்தைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியும், ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெறக் கோரியும் ஐநா பொதுச் சபையின் அவசர கால அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளில், 141 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. ரஷ்யா, சிரியா, பெலாரஸ், வட கொரியா, எரித்ரீயா ஆகிய ஐந்து நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 35 நாடுகள் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. இந்தியா ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்துவரும் நிலையில், இது ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளதாக மேற்குலக நாடுகளில் கருத்து எழுந்து வருகிறது. 

 

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய அமெரிக்கத் தூதரக அதிகாரி டொனால்ட் லூ, "அமெரிக்க வெளியுறவுச் செயலர் அந்தோனி பிளிங்கன், அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் இந்த போர் தொடர்பாக இந்தியாவுடன் இடைவிடாத உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்க முயற்சிக்கும் போது இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. ஒன்று, இந்த மோதலுக்குப் பேச்சுவார்த்தை வாயிலான தீர்வுக்கான சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து முன்வைக்கிறது. மற்றொன்று, இன்னும் 18,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து அவர்களைப் பாதுகாக்க முயல்கின்றனர்

 

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க இந்தியாவை வலியுறுத்துவதற்காக நாங்கள் அனைவரும் பணியாற்றி வருகிறோம். ஒற்றுமையான முடிவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும், ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க வெளியுறவுத் துறை இந்தியாவுடன் பேசி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்குத் தேவையான உதவி பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. இதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது முக்கியமான ஒரு செயல்பாடு. இந்தியா நேரடியாக ரஷ்யாவை விமர்சிக்கவில்லை என்றாலும், ஐநா கூட்டத்தில் பேசுகையில், 'ஐநா உறுப்பு நாடுகள் அனைத்தும் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மதிக்க ஐ.நா. சாசனத்தை கடைபிடிக்க வேண்டும்' என்றது. இதன்மூலம் உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா மீறுகிறது என்பதை இந்தியா உணர்ந்திருப்பது தெரிகிறது" என்றார். 

 

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச்சபை ஆகிய இரண்டிலும் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில், அமெரிக்கத் தூதரக அதிகாரியின் இந்த பேச்சு மூலம் அமெரிக்கா இந்தியாவை தன் பக்கம் சேர்த்துக்கொள்வதற்குத் திட்டமிடுவது உறுதியாகியுள்ளது. 

 

டொனால்ட் லூ-வின் இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக "இந்தியாவுடனான அமெரிக்க உறவு" குறித்த கூட்டம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகியது குறித்து அமெரிக்காவின் பிரதான கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனாலும், சீனாவுடனான தங்களது வல்லரசு போட்டிக்கு இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என அமெரிக்கா நம்புவதால், இந்தியா மீது நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காது என நம்பப்படுகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.