Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்து செல்லும் தீவிரவாதி வீடியோ வெளியானது!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் சர்வதேச அளவில்  "ஷாங்ரிலா ஹோட்டல் " என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்  செயல்பட்டு வருகிறது.  இந்த ஹோட்டலுக்கு வெளிநாட்டினர் மற்றும் சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் உட்பட பலர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 
 

video



அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை  அவர்களை குறி வைத்து அந்த ஹோட்டலில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்தது.  இந்த நிலையில் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ இலங்கை உள்ளூர் சேனல்களில் வெளியாகியுள்ளது. இதனை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சரியாக ஒரு நிமிடம் ஐந்து விநாடிகள் காட்சிகள் அமைந்துள்ளனர். அந்த நட்சத்திர ஹோட்டலில் தலையில் ஊதா நிறத் தொப்பியுடன் ஒருவர் சந்தேகப்படும் படி நடந்து செல்கிறார். அவர் தான் தற்கொலைப்படை தீவிரவாதியாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் புனித செபாஸ்டியன் சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளனர். 

 

video



நிகோம்போவில் நடந்த இந்த சம்பவத்தில் பேக் அணிந்த ஒருவர் சந்தேகப்படும் படியாக நடந்து சென்றார். இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பு இந்திய உளவுத்துறை மற்றும் தமிழக உளவுத்துறை இலங்கை அரசை எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய உளவுத்துறை அறிக்கையை இலங்கை அரசு அலட்சியமாக கருதியதால் தான் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை மக்களிடம் அதிபர் மற்றும் இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கேட்டது. இதன் தொடர்ச்சியாக இலங்கை முப்படை தளபதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொடர் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


பி.சந்தோஷ், சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.