Skip to main content

அவசரத்தில் சாலையில் விமானத்தை தரையிறக்கிய பைலட்! (வீடியோ)

Published on 03/06/2018 | Edited on 03/06/2018

விபத்தைத் தவிர்ப்பதற்காக விமானி ஒருவர் தான் ஓட்டிவந்த விமானத்தை நெரிசல்மிக்க சாலையில் தரையிறக்கிய காட்சி வைரலாகி வருகிறது.
 

Plane

 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ளது ஹஃபிங்டன் கடற்கரை. கடந்த வெள்ளிக்கிழமை காலை, இங்குள்ள சாலையில் வேலைக்கு செல்பவர்களின் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. அப்போது மிகுந்த இரைச்சலுடன் சிறிய ரக விமானம் ஒன்று கார்களுக்கு மேல் வேகமாக கடந்து செல்கிறது. இதை கவனித்த வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக தங்கள் வாகனங்களை ஓரங்கட்ட, விரைந்துசென்ற விமானம் எந்த பாதிப்புமின்றி தரையிறங்கியது. இந்த நிகழ்வின்போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. 
 

இந்தக் காட்சிகள் வாகன ஓட்டி ஒருவரின் டேஷ் போர்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. காரை ஓட்டிச் சென்ற நபர் பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கிய பெண்ணை நோக்கி கையை உயர்த்த, அவரும் பதிலுக்கும் கையை உயர்த்துவதும் அதில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் உதவியுடன் விமானம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விமானம் மேலே பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அதன் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் இருந்து தப்பவே தான் சாலையில் விமானத்தைத் தரையிறக்கியதாக விமானத்தை இயக்கிய பெண் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமானம் தரையிறங்கிய வேகத்தில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

The passengers were in for a shock as the plane landed

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் ஒன்று  தரையிறங்கிய வேகத்தில் மீண்டும் மேலே எழும்பியது. இதனால் அதிலிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

 

சண்டிகரிலிருந்து சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகா ஏர்லைன்ஸ் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் திங்கட்கிழமை இரவு 8.40 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், விமானம் தரையிறங்கியதும் மீண்டும் மேலே பறக்க ஆரம்பித்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

 

இரவு 9:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானம் முன்னரே தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே விமானம் தரையிறக்கப்படுவதற்கான ஒப்புதல் கிடைக்காததால் சிறிது நேரத்திற்குள் விமானத்தை பறக்கவிட்டு மீண்டும் சரியான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு விமானம் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

 

 

Next Story

தோழியை விமானி அறையில் அனுமதித்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு அபராதம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

dgca fine thirty lakhs for air india limited dubai to delhi flight

 

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக இருந்த ஒருவர் தனது பெண் தோழியை விமான பைலட்டின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது குறித்த புகார் ஒன்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) அளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இருப்பினும் இந்த சம்பவம் நடந்த அன்று அந்த பெண் விமானத்தில் பயணியாக சென்றது தெரியவந்தது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்த விமானியின் இந்த செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. விமானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது விமான ஓட்டுநர் உரிமமும் 3 மூன்று மாதக் காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது விமானியின் இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.