Skip to main content

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 50 பேர் பலி!!

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

 

accident

 

பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

 

ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோவில் உள்ள கிசாண்டு என்ற நகரில் நேற்று பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி எதிரில் வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

 

இந்த விபத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வானளவில் எழும்பிய தீ பிழம்புகளால் விபத்து நடத்த இடத்திற்கு அருகில் இருந்த சாலை மற்றும் வீடுகளுக்கும் வேகமாகப் தீ பரவ தொடங்கின. இந்த கொடூர தீ விபத்தில்  50 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்