Skip to main content

தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
nawaz


ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் அதிபர்  நவாஸ் செரிபின் தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. அவருடன் கைது செய்யப்பட்ட அவருடைய மகள் மரியத்தின் தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 

ஊழல் பணத்தில் லண்டனில் சொத்துக்களை வாங்கியுள்ளார் என்று இவரது மீதும் மற்றும் அவரின் குடும்பத்தார்களின் மீதும் குற்றச்சாட்டு வந்தது. அதனை தொடர்ந்து நவாஸ் செரிப்பின் பிரதமர் பதவி பறிபோனது. பின்னர், வழக்கு தொடரப்பட்டது. இறுதியில், நவாஸ் செரிப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், நவாஸின் மருமகனுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 

கடந்த வாரம் நவாஸின் மனைவி காலமானதற்காக பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை நிறுத்திவைத்து, விடுதலை செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்ணுக்கு கிடைத்த உயர்ந்த பதவி; பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல்முறை!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
woman oath chief minister in punjab pakistan

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

அதன்படி நடைபெற்ற இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து முடிந்த பிறகு, புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஸ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் நடந்த அதே நாளில் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில், பஞ்சாப்பில் நடைபெற்ற இந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 137 இடங்களிலும், இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 113 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் வரலாற்றில் பெண் ஒருவர் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், நேற்று (26-02-24) மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின், முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அவர் பேசுகையில், “என்னுடைய தந்தை அமர்ந்திருந்த ஆசனத்தில் இப்போது அமர்ந்துள்ளேன். இந்த பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த பெருமை. பெண் தலைமைத்துவம் என்ற நடைமுறை, எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். 

Next Story

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மேலும் ஏழு ஆண்டு சிறை...!

Published on 24/12/2018 | Edited on 24/12/2018

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மூன்று ஊழல் வழக்குகள் போடப்பட்டன. இதில் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வந்தது. அந்த வழக்கில் நவாஸ் செரீப்புக்கு பத்து ஆண்டு சிறை, அவரது மகள் மரியத்திற்கு ஏழு ஆண்டு சிறை மற்றும் அவரின் மருமகன் கேப்டன் சப்தாருக்கு ஒர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். 

 

 

nn

 

 

இந்த நிலையில், மீதமுள்ள இரண்டு வழக்குகளின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில், அல்-அஜிஸா இரும்பு ஆலைகள் ஊழல் வழக்கில் நவாஸ் செரீப்புக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷெரிப்புக்கு 17 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்து தேசிய பொறுப்பான்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மற்றொரு ஊழல் வழக்கில் ஷெரீப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.