Skip to main content

காசாவின் முக்கிய நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 10/09/2024 | Edited on 10/09/2024
Israel  sudden beaten on Gaza's main southern city of Khan Yunis

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை  40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதே சமயம், மேற்கு கரை பகுதியில் ஹமாஸின் ஊடுருவல் இருப்பதால் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், அங்கு திடீர் திடீரென தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், காசாவின் முக்கிய தெற்கு நகரமான கான்யூனிஸ் பகுதியில் இன்று அதிகாலை இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ள நிலையில், 60 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்