Skip to main content

கரோனா - பலி எண்ணிக்கை 19,752 ஆக அதிகரிப்பு!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020


சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் இந்த நோய் தொற்றுக்கு இதுவரை 4,40,336 பேர் ஆளாகி உள்ளனர். மேலும் 19,753 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. அடுத்து வரும் சில நாட்கள் மிக முக்கியமானவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கவனிக்க தக்க ஒன்றாகும்.

 

சார்ந்த செய்திகள்