Skip to main content

சிறுவனைக் கடத்திய இளைஞர்! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The youth who kidnapped the boy! Shocking information at trial!

 

விழுப்புரம் மாவட்டம், திருக்கனூர் அருகே உள்ள மூங்கில்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (20). இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவருகிறார். இவர், நேற்று முன்தினம் (04.12.2021) அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது ஐந்து வயது மகனை தின்பண்டம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி திருக்கனூர் டவுனுக்குத் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு 7 மணியளவில் உதயன் மட்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் இருந்த தனது பாட்டியிடம், ‘மண்ணாடிப்பட்டு - திருக்கனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் தானும் அன்பழகன் மகன் ஐந்து வயது சிறுவனும் வந்துகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து என்னைத் தாக்கிவிட்டு சிறுவனை கடத்திச் சென்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் ஒரு லட்சம் பணம் கொடுத்தால் சிறுவனை விடுவிப்பதாக கூறிவிட்டு சென்றார்கள்’ எனக் கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சிறுவனின் தந்தை அன்பழகனிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக திருக்கனூர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் போலீசார் திருக்கனூர் பகுதியைச் சுற்றிலும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீசாருடன் மாணவர் உதயன் கூடவே சென்று தன்னைத் தாக்கிவிட்டு சிறுவனைக் கடத்திச் சென்ற இடம் இது என்று அடையாளம் காட்டியதோடு, அவர்களுடன் சேர்ந்து உதயனும் சிறுவனைத் தேடியுள்ளார். 

 

இதற்கிடையே, போலீசார் உதயன் பயன்படுத்திவந்த செல்ஃபோனை பறிமுதல் செய்து அந்த ஃபோனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வுசெய்தனர். அப்போது இரவு 8.30 மணி அளவில் அந்த ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து போலீசார் பேசியபோது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் தனது பெயர் பழனியம்மாள் என்றும், தனது வீட்டில் ஒரு சிறுவனைப் கொண்டுவந்து விட்டுவிட்டு பிறகு வந்து அழைத்துச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற உதயன் இன்னும் வந்து சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என்பதற்காக ஃபோன் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். 

 

அவரிடம் விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட போலீசார், நேரடியாக அந்த வீட்டுக்குச் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும், உதயன் சிறுவனைக் கடத்திவிட்டு, மர்ம நபர்கள் என்று நாடகமாடியுள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

 

இதுகுறித்து உதயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய செல்ஃபோன் வாங்கப் விரும்பியதாகவும், அதற்குப் பணம் கிடைக்காததால் சிறுவனைக் கொண்டுபோய் ஒரு வீட்டில் விட்டுவிட்டு, பணம் கேட்டு கடத்தல் நாடகம் நடத்தி அதன் மூலம் வரும் பணத்தில் செல்ஃபோன் வாங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்தில் சிறுவனைக் கடத்தியதாக கல்லூரி மாணவர் உதயன் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.