Skip to main content

என் அம்மா தான் என் கணவருக்கு மனைவி... அதிர வைத்த இளம்பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்! 

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

கன்னியாகுமரி பகுதியில் 15 வயதில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், 25 வயது ஆன நிலையில் இளைஞர் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களியக்காவிளை காஞ்சாம் புறம் வயக்கலூரை சோ்ந்த ரமேஷ் குமாா்(39) க்கும் தக்கலை பகுதியை சோ்ந்த பிாித்தி (27) க்கும் 2009-ல் பிாித்தியின் தாயாா் விருப்ப படி பாறச்சாலை பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது. இவா்களுக்கு விஷ்ணுதேவ்(9), சமஸ்கிருதி ஆா் நாயா்(4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா். கேட்டாிங் தொழில் செய்து வந்த ரமேஷ்குமாா் 2017-ல் வெளிநாடு வேலைக்கு சென்றாா். 

 

incident


 

incident



பின்னா் சமீபத்தில் ஊருக்கு வந்த ரமேஷ்குமாாிடம் பிாித்தி இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு நான் தனியாக வாழ போகிறேனு சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னா் ரமேஷ்குமாா் மனைவியை எங்கும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடா்ந்து அவா் குழித்துறை மகளிர் காவல்நிலையம் மற்றும் தக்கலை காவல்நிலையத்தில் புகாா் கொடு்த்தாா்.

 

incident



இதைதொடா்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் பிாித்தி திடுக்கிடும் தகவலை போலீசாாிடம் கூறினாா். அதில் ரமேஷ் குமாாரை எனக்கு திருமணம் செய்து வைக்கும்போது எனக்கு வயது 15 அப்போது எனக்கு திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் அம்மாவின் வற்புறுத்தலின் போில் பதிவு திருமணம் நடந்தது. இதில் நானும் அம்மாவும் பாா்ப்பதற்கு அக்கா தங்கை போல் இரட்டையா்கள் போல் இருப்போம். இதனால் பதிவு திருமணத்துக்கு என் பெயா் வயதை மறைத்து அம்மாவின் பெயா் சிந்து அதை என் பெயராக்கி அம்மாவின் வாக்காளா் அடையாள அட்டையில் அதை நான் தான் என குறிப்பிட்டு திருமணம் செய்து வைத்தனா். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு தான் உண்மை சம்பவம் ரமேஷ்குமாருக்கு தொியவந்தது.

 

incident


 

incident



இந்தநிலையில் தான் நான் தற்போது முளகுமூடு பகுதியை சோ்ந்த அகில் (28) என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துள்ளேன். அவனுடன் தான் சட்டப்படியாக வாழ போகிறேன். ஆனால் சட்டப்படியாக எனக்கும் ரமேஷ்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. சட்டப்படி பாா்த்தால் என்  அம்மா சிந்துவுக்கும் ரமேஷ்குமாருக்கும்தான் சட்டப்படி திருமணம் நடந்து இருக்கிறது. எனவே அம்மா மீது தான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரமேஷ்குமாருடன் சட்டத்துக்கு விரோதமாக இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளதால் அந்த குழந்தைகளை ரமேஷ்குமாருடன் ஒப்படைத்து விட்டேன் என்றாா். இந்த விசித்திர திருமணம் சம்பவம் போலீசை திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் விசாாித்து வருகின்றனா்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘உன் நாய் எனக்கு வேண்டாம்!’ - ஒரு மாதம் கழித்து திருப்பிக் கொடுத்தவருக்கு கத்திக் குத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
person who bought the dog and returned it after a month was stabbed

சாத்தூர் வட்டம் – புல்வாய்பட்டி கிராமத்தில் செல்லத்துரையும் அவருடைய  மனைவி முத்துலட்சுமியும் சொந்தமாக ஆடு மேய்த்துப் பிழைத்து வருகிறார்கள். அதே கிராமத்தில், கூலி வேலை பார்க்கும் வெங்கல கருப்பசாமி, மனைவி மாரீஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். செல்லத்துரையிடம் ரூ. 5000 விலை பேசி, ஒரு மாதம் கழித்துப் பணம் தருவதாகக் கூறி வேட்டை நாய் ஒன்றை வாங்கினார் வெங்கல கருப்பசாமி.

ஒருமாதம் கழித்து “எனக்கு இந்த நாய் வேண்டாம்..” என்று திருப்பிக் கொடுத்தபோது, வாங்க மறுத்திருக்கிறார் செல்லத்துரை. அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “நாயைத்  திருப்பியா கொடுக்கிற?” என்று ஆவேசமான செல்லத்துரை, வெங்கல கருப்பசாமியை கத்தியால் குத்தியிருக்கிறார். முதலில் ஏழாயிரம் பண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வெங்கல கருப்பசாமி. அவர் அளித்த புகாரின் பேரில், செல்லத்துரை மீது சாத்தூர் தாலுகா காவல்நிலையம் வழக்குப் பதிவு  செய்துள்ளது.

அதே சாத்தூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மனைவி முத்துலட்சுமி வெங்கல கருப்பசாமி மீது ஒரு புகாரளித்துள்ளார். அதில், தன் கணவர் செல்லத்துரையை வழிமறித்து கத்தியால் குத்த வெங்கல கருப்பசாமி  முயன்றபோது, அந்தக் கத்தியை தான் பிடுங்கியதாகவும், அப்போது தன்னை மார்பிலும் கழுத்திலும் வெங்கல கருப்பசாமி அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெங்கல கருப்பசாமி மீதும் சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.