Skip to main content

’இந்த அரசை கவிழ்ப்பதற்காக நாங்கள் அனைத்து கட்சி கூட்டம் நடத்தவில்லை’ - ஸ்டாலின்

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

 

stalin

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று (19-02-2018) கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

 

 
மு.க.ஸ்டாலின்: கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பல்வேறு  பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று ஆய்வு செய்தேன். குறிப்பாக, கடந்த 1966 ஆம் ஆண்டு அன்றைக்கு திமுகவின் சார்பில் மேயராக இருந்த மோசஸ் அவர்களுடைய முயற்சியில்,  திரு.வி.க.நகர் பஸ் ஸ்டேண்ட் பகுதியில் இந்த சமூக நலக்கூடம் கட்டப்பட்டு, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார். கொளத்தூர் தொகுதியில் நான் முதன்முதலாக, கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொது நலச்சங்கங்களை சேர்ந்தவர்கள், இடிந்த நிலையில் இருந்த பாழடைந்த இந்த சமூக நலக்கூடத்தை முழுதாக இடித்துவிட்டு, நடுத்தர மற்றும் ஏழை - எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளும் கொண்ட திருமண மண்டபமாக கட்டித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

 

அதனையேற்று, எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்கீடு செய்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.  ஆனால், மாநகராட்சியின் சார்பில் அதை நிறைவேற்ற முடியாமல், இடையூறு செய்து தடைபோட்டனர். எனவே, நீதிமன்றம் வரை சென்று போராடி, அதனை இப்போது நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது. அன்றைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது கட்டிடத்தை கட்டி முடிக்க ரு.3 கோடி அளவுக்கு உயர்ந்து, இப்போது அரசும், மாநகராட்சியும் அனுமதி வழங்கியிருக்கின்றன.

 

எனவே, கூடுதல் தொகையை எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த, இப்போது ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் சேர்த்து, ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா, இப்பகுதியில் இருக்கின்ற பொது நல சங்கங்களின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்று இருக்கிறது.

 

அதேபோன்று, வார்டு எண் 69க்கு உட்பட்ட திக்காகுளம் இணைப்புத் தெருவில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் சாலை போடப்பட்டிருக்கிறது. அது பயனற்ற நிலையில் இருந்ததால், சாலை வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே, 15-10-2017 அன்று எனது சொந்த செலவில் இப்பகுதியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போது, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 32 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்திருக்கிறேன்.

 

அதுமட்டுமல்ல, பந்தர் கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் ஹோம் கிளாஸ் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, ரூ.14 லட்சம் ரூபாயை எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்புதல் கடிதத்தை இன்று வழங்கினேன். அந்தப் பள்ளிக்கு தேவையான நாற்காலிகள், இருக்கைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் வழங்கினேன். எனவே, இந்தத் தொகுதிக்கு தேவைப்படும் அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றும் முயற்சியில் நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

 

செய்தியாளர்: ஆந்திர வனப்பகுதிகளில் தமிழக கூலித் தொழிலாளர்கள் மோசமான முறையில் கொல்லப்படுவது தொடர்கிறதே? நேற்றும் 7 தமிழர்களின் உடல்கள் ஏரியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறதே?

 

ஸ்டாலின்: தமிழக அரசு இந்த விவகாரத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு, மிகுந்த கவனத்துடன் அணுகி, உண்மை நிலை குறித்து கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

செய்தியாளர்: அனைத்து கட்சி கூட்டம் நடத்தும் உங்கள் அறிவிப்பு குறித்து, அதனால் இந்த அரசை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்து இருக்கிறாரே?

 

ஸ்டாலின்: இந்த அரசை கவிழ்ப்பதற்காக நாங்கள் அனைத்து கட்சி கூட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே கூட்டுகிறோம். அந்தக் கூட்டத்திற்கு ஆளும் கட்சியான அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் கூட அழைப்பு விடுக்க முடிவு செய்திருக்கிறோம். ஆனால், கர்னாடகாவில் உள்ள கட்சிகளுக்கு இருக்கின்ற உணர்வு, இங்குள்ள குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுகவுக்கு இல்லை என்பது வெட்கக்கேடானது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !