Skip to main content

“உதவி செய்வது 1 ரூபாய்.. விளம்பரத்துக்காக செலவழிப்பது 100 ரூபாய்!”- கபட நாடகம் ஆடுவதாக திமுக மீது ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020

 

virudhunagar district minister rajendra balaji press meet


விருதுநகரில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது, “திமுகவிலுள்ள ஆர்.எஸ்.பாரதி பேசுவது அனைத்துமே தீண்டாமைதான். வன்கொடுமை வழக்கு சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை கடுமையாக விமர்சனம் பண்ணும் நோக்கில் ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டிக்கத்தக்கது. தலைமைச் செயலகத்தில் டி.ஆர்.பாலுவும், தயாநிதி மாறனும் மனு கொடுத்துவிட்டு பேட்டி அளிக்கும்போது, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் தயாநிதிமாறன் பேசியதும் கண்டிக்கத்தக்கது. எடப்பாடியார் ஆட்சியில் எல்லோரும் சமம் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். எனவே தமிழகத்தில் பிரிவினைவாதம் என்பதே கிடையாது. பாகுபாடுகளை உருவாக்கி, தீண்டாமையை உருவாக்கி, அரசியல் பண்ணும் ஒரே கட்சி திமுக தான்.  


கரோனா பாதிப்பில் திமுக சார்பாக மனுக்கள் வாங்கப்பட்டது. ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலரிடம் கொடுத்தனர். 98 ஆயிரத்து 558 மனுக்கள் மட்டுமே அதில் இருந்தன. முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலமாக மனுக்கள் அனைத்தும் ஆராயப்பட்டது. அவர்கள் கொடுத்த அனைத்து மனுவிலும், சாப்பாட்டுக்கு அரிசி கொடுங்கள் என்றுதான் கேட்கப்பட்டது. மானியம் கொடுங்கள், லோன் கொடுங்கள் என்று எந்த மனுவிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர்கள் சிறு குறு விவசாயிகள் சம்பந்தப்பட்டவை, அதை அரசாங்கம் தான் நிறைவேற்ற முடியும் என்று பொய்யாகத் தெரிவிக்கின்றனர்.

கரோனா விஷயத்தில் திமுக கபட நாடகம் ஆடுகிறது. திமுகவினர் உண்மையிலேயே நல்லவர்களாக இருந்தால் அவர்களிடம் கொடுத்த மனுக்களுக்கு, அவர்கள் அரிசி, பருப்பு வழங்கியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு,  அவர்கள் வாங்கிய மனுவை எங்களிடம் கொடுக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில், எங்களது அதிமுக சார்பாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் நகரத்திலும் ஒவ்வொரு பகுதியாக அதிமுகவினர் தங்களால் இயன்ற அளவிற்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கினார்கள். 50 லாரிகளில் 10 கிலோ அரிசியை வீடு வீடாகச் சென்று கொடுத்தோம். 

திமுகவினர் ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு நாடகமாடி வருகின்றனர். உலகத் தலைவர்கள் அனைவரும் விலகி இரு, வீட்டில் இரு என்று கூறி வருகின்றனர். தமிழக முதல்வரும் அதையே சொல்லி வந்தார். ரேஷன் கடைகளில், அரிசி, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை அதிமுக அரசு இலவசமாக வழங்கியது. இப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிவாரணங்களை எடப்பாடியார் அரசு வழங்கி வருகிறது. 

சரியான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் இந்த ஆட்சிக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறி இருக்க வேண்டும். கரோனா நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்ற நோக்கில் திமுக அரசியல் செய்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 

 

 


ஆனால் முன்னாள் அமைச்சர் ஒருவர்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 300 பேர் உயிரிழந்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இப்படியெல்லாம் திமுக அரசியல்செய்ய வேண்டுமா? திமுகவினர் கொள்ளையடித்த பணத்தில் 50- க்கும் மேற்பட்ட சேனல்களை நடத்தி வருகின்றனர். ஒரு ரூபாய் செலவழித்தால், 100 ரூபாய் செலவழித்து விளம்பரம் தேடுகின்றனர். எடப்பாடியார் அரசு செய்கின்ற உதவிகள் வெளியே தெரியாத அளவிற்கு நாங்கள் செய்து வருகின்றோம்.

 

எடப்பாடியார் அரசு எடுத்த முயற்சியால் சென்னையில் உயிரிழப்பு கட்டுபடுத்தப்பட்டு வருகின்றது நல்ல ஒரு நிர்வாகத்தை எடப்பாடியார் அரசு வழங்கி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற தலித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிருப்தியோடு அங்கு இருக்கின்றனர். நீதி அரசர்கள் குறித்து பேசும்போது நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்வது திமுக கட்சிக்கு அழகல்ல. திமுக இது போன்று பேசி வருவது வாடிக்கையாக உள்ளது. திமுக கரோனா நிவாரணம் அளிப்பது அனைத்தும் கபட நாடகமே. தமிழக அரசு மீது திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள்  கருணாநிதி காலத்திலேயே, சாதி பற்றி பேசி அரசியல் செய்தவர்கள்தான் திமுகவினர். மக்களை குடிக்க பழக்கி விட்டவர் கருணாநிதி. அதை படிப்படியாக மறக்க வைக்கிறார் தமிழக முதல்வர்  எடப்பாடியார். 

 

xம

எதுவும் இல்லாமல் சென்னைக்கு வந்த கலைஞரின் குடும்ப சொத்து குறித்து கணக்கு காட்ட ஸ்டாலின் தயாரா? அம்மா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது நீதிமன்ற உத்தரவு. அதை தமிழக அரசு ஏற்கும். ரஜினியும், கமலும் சினிமா முலம் பல கோடி ரசிகர்களைப் பெற்றவர்கள் அவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக இருப்பதால் அமைதியாக இருக்கிறார்கள்.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயங்கரமான ஆளுன்னு சொன்னாங்க... ஆனா எனக்கு மயிலிறகு கொடுத்தாரு” - வீரப்பனை பற்றி பிரபாவதி ஆர்.வி.

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
 Prabbhavathi RV speech in Koose Munisamy Veerappan press meet

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. இதில் நக்கீரன் ஆசிரியர், தயாரிப்பாளர் பிரபாவதி மற்றும் ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.   

அப்போது தயாரிப்பாளர் மற்றும் இந்த சீரிஸை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரபாவதி ஆர்.வி. பேசுகையில், “இந்த மேடை எனக்கும் தீரன் ப்ரொடக்‌ஷன்ஸுக்கும் முக்கியமான ஒன்று. இந்த இடத்திற்கு நான் வர எனக்கு உறுதுணையாக இருந்த அப்பா, அம்மா, நண்பர்கள் எங்கள் நக்கீரன் குடும்பம் ஆகியோருக்கு நன்றி. சின்ன வயதிலிருந்து சில விஷயங்கள் நம்மை பாதிக்கும். ஒரு எமோஷனை கிரியேட் பண்ணும். அப்படி ஒரு விஷயம் நடந்தது. 

திடீர்னு ஒருநாள் அப்பா எங்கயோ போறாங்க. வீட்ல அம்மா அழுறாங்க. எல்லாருமே பயத்துடன் இருக்காங்க. ஒரு சாதாரணமான சூழலே இல்லை. முதலமைச்சர் முதல் பெரிய பெரிய ஆட்கள் ஃபோன் பண்றாங்க. என்னம்மா ஆச்சுன்னு அம்மாவிடம் கேட்டபொழுது, அப்பா வீரப்பன்னு ஒருத்தரை பார்க்க போறாருன்னு சொன்னாங்க. யாரு அவருன்னு கேட்டதற்கு, அம்மாவிற்கும் பெரிசாக தெரியவில்லை. ஆனால் ரொம்ப பயங்கரமான ஆளு, யானை, மனுஷங்களையெல்லாம் கொன்னுருக்காருன்னு சொன்னாங்க.

எங்களுக்கு அப்பாவ விட்டா ஒன்னும் கிடையாது. அவருக்கு நக்கீரன் பத்திரிகை, அவருடைய தம்பிகள், அவங்களுடைய குடும்பம் இது அனைத்திற்குமே அப்பாதான் அஸ்திவாரம். இப்படி இருக்கையில், ஏன் அப்பா போறாருன்னு யோசிப்பேன். திடீர்னு வருவாரு. காலில் எல்லாம் அட்டை பூச்சி கடிச்ச தடம் இருக்கும். வலியும் இருக்கும். அதை பார்க்கும் பொழுது நமக்கு கஷ்டமாக இருக்கும். ஒரு நாள் மயிலிறகை நீட்டி இது வீரப்பன் கொடுத்தாருன்னு கொடுத்தார். என்னடா... பயங்கரமான ஆளுன்னு சொல்றாங்க... ஆனா நமக்கு பிடிச்ச மயிலிறகை கொடுத்திருக்கிறாரே... இவர் எப்படிப்பட்ட ஆளு என சின்ன வயதிலிருந்தே எண்ணம் இருக்கும்.   

பின்பு நான் காலேஜ் போறேன். நக்கீரன் 25வது ஆண்டு வருது. அதன் வரலாறை டாக்குமெண்ட்ரி பண்ண முடிவெடுத்தேன். அதற்காக காட்டுக்குள் போறேன். அந்த மக்களை சந்தித்து பேசும்பொழுது, இவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்களே என அவர்கள் வலியை நினைத்து 3 நாள் தூக்கமே வரவில்லை. அதனால் சின்ன வயதிலிருந்து ஏற்பட்ட பாதிப்புகள், மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இதை ஒரு பெரிய ஆவணப் படைப்பாக மக்களிடம் சேர்க்க வேண்டுமென தோனுச்சு. அப்பாவிடம் கேட்டேன். பெரிய பெரிய ஆட்கள் இதை ஆவணப்படுத்த கேட்டபொழுது கூட அப்பா தரவில்லை. சரி நம்ம அப்பாதான, கேட்டவுடனே கொடுத்துருவாங்கன்னு நினைத்தேன். ஆனால் மற்றவர்களை விட எனக்கு நிறைய டெஸ்ட் வச்சாங்க. எக்ஸாம் வைக்காததுதான் பாக்கி.     

ஏனென்றால், நக்கீரன் எப்பொழுதும் எளிய மக்களுடைய குரலாக இருந்திருக்கிறது. அப்பா காட்டிற்கு போனது கூட அந்த மலைவாழ் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைக்குமா என்பதற்காகத்தான். ஒரு ஆவணம், எல்லாத்தையும் சரியாகவும் நேர்மையாகவும் கொண்டு போய் சேர்க்கணும் என்ற நம்பிக்கையை கொடுத்த பிறகுதான் முழு நம்பிக்கையோடு அப்பா கொடுத்தார். அந்த நம்பிக்கைக்காக அப்பாவிற்கு பெரிய நன்றி. அதன் பிறகுதான் தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் ஆரம்பித்தேன். பின்பு தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம் போனேன். எல்லா சந்தேகத்தையும் தீர்த்தார். ரொம்ப சப்போர்ட் பண்ணார். ஜீ குழுமம் இப்போது வரைக்கும் பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது. 

என்னுடைய கனவை அவங்களுடைய கனவாக நினைத்து உறுதுணையாக நடந்துக்கிட்டது ஜெய் மற்றும் வசந்த் அண்ணா. அவங்க இல்லன்னா இந்த ப்ராஜெக்ட் இந்த இடத்தில் இப்படி இல்லை. அவங்க எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். அப்புறம் இயக்குநர் ஷரத், ஒளிப்பதிவாளர் ராஜ், படத்தொகுப்பாளர் ராம், இசையமைப்பாளர் சதீஷ் என எல்லாருமே அவரவர்களின் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். என்.ராம் சாரில் தொடங்கி, சீமான், ரோகிணி என அனைவருக்குமே பெரிய நன்றி. படக்குழுவிற்கும் நக்கீரன் டீமிற்கும் ட்ரைலரை வெளியிட்ட சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணா எல்லாருக்குமே பெரிய நன்றிகள்” என்றார்.    

Next Story

தமிழ் சினிமாவில் புதுமையான மேக்கிங்; அஸ்வின்ஸ் பட அனுபவம் பகிரும் விமலா ராமன்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Asvins Press Meet - Vimala Raman

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. 

 

நிகழ்வில் கலந்து கொண்டு விமலா ராமன் பேசியதாவது, “இயக்குநர் தருணுடைய கனவை அனைவரும் நிறைவேற்றியுள்ளதற்கு வாழ்த்துகள். லாக்டவுன் சமயத்தில் தருணுடைய ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்தபோதே எனக்கு பிடித்திருந்தது. ஒரு இயக்குநருக்கு என்ன தகுதி வேண்டுமோ அவை அனைத்தும் தருணுக்கு இருந்தது. இந்த ப்ராஜெக்ட்டில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சியான ஒன்று. 

 

வசந்த், சரஸ், முரளி, உதய் என நாங்கள் அனைவரும் குடும்பமாக வேலை பார்த்தோம். விஜய் சித்தார்த்தின் இசை எனக்கு பிடித்திருந்தது. சரியான இசையைக் கொடுத்துள்ளார். லண்டனில் நாங்கள் மைனஸ் 4 டிகிரி குளிரில் படமாக்கினோம். யாருமே முகம் சுழிக்காமல் நடித்துக் கொடுத்தனர். தமிழ் சினிமாவுக்கு வேறு விதமான மேக்கிங்கை காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அனைவருக்குமே இருந்தது. இதை சாத்தியமாக்கிய பாபி சார், சக்தி சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார்.