Skip to main content

மோடி ஆட்சியின் கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி பரவாயில்லை: ப.சிதம்பரம்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
pc


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வல்லம்ராஜன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி வரவேற்புரையாற்றினார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அவர் பேசியதாவது,

காமராஜர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒருபாடம். தற்போது மத்திய ஆட்சியில் 31 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 69 சதவீத வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் இங்கு தற்போது நடக்கிற நிகழ்வுகளை, கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி பரவாயில்லை.

சிறுபாண்மையினர், தலித்துகள், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் பாரதிய ஜனதா ஆட்சியில் அரங்கேறி வருகின்றன. இந்தியாவில் தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். மோடி ஆட்சியில் இந்தியா விபரீதமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது. நான்கு பேர் தூக்கி கொண்டு போகும் போது தான் என் குரல் நிற்கும். என் பேனா எழுதுவது நிற்கும்.

 

 

கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் வரி பிடித்தம் செய்ததன் மூலம் ரூபாய் 10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் எங்கே போனது? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றார். இதையெல்லாம் அவர் செய்திருக்கிறாரா? இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

பயிர் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரீமியம் தொகை வசூலிக்கிறார்களோ, அந்த அளவு இழப்பீடு தர வேண்டும். 2016- 17 ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூபாய் 12 ஆயிரம் கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை 5ஆயிரம் கோடி தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இதுபோன்ற திட்டங்களால் இந்திய பொருளாதாரம் வலுவிழந்து உள்ளது. பண மதிப்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதி கெட்டுள்ளது.
  pc


தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் பேசும்போது, பண மதிப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இது இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புள்ளிவிவரம். இந்தியா முழுவதும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் நிம்மதியின்றி உள்ளனர்.

 

 

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது என்று யோசித்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு பேர் உள்ளனர். இவர்களிடம் கணக்கு கேட்க ஆள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சத்துணவு முட்டை வழங்கும் திட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி நேரு குடும்பம் பதவிக்காக அலைகிறது என்று கூறி வருகிறார். ஆனால் 1989ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் 29 ஆண்டுகளாக இந்த நேரு குடும்பத்தில் யாரும் அரசு பொறுப்புக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருந்தது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இருந்தது வல்லரசு நாடுகள் உதவியாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.