Skip to main content

கவிஞர் வாலியின் 87வது பிறந்தநாள் விழா! எஸ்.பி. முத்துராமன், கவிஞர் காசி ஆனந்தனுக்கு விருது!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
Vaali



வாலி பதிப்பகம் சார்பில் கவிஞர் வாலியின் 87வது பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. 
 

விழாவுக்கு நல்லிகுப்புசாமி செட்டியார் தலைமை வகித்தார். திருச்சி நகைச்சுவை மன்ற தலைவர் சொக்கலிங்கம், சோழ மண்டல தமிழலக்கிய கூட்டமைப்பு கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். வாலி பதிப்பக செயல் இயக்குநர் பாரதி சங்கர் வரவேற்றார்.
 

திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருக்கு வாலி பதிப்பக சார்பில் ரூபாய் 50,000 பொற்கிழி பாராட்டு பத்திரம் அடங்கிய கவிஞர் வாலி விருதுகளை பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நடிகர் சார்லி ஆகியோர் வழங்கி கவுரவித்தனர். 
 

திரைப்பட ஆய்வாளர் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன் தொகுத்த கவிஞர் வாலி திரையிசை பாடல்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. கும்பகோணம் முரளி ஆர்ட்ஸ் கிருஷ்ணசாமி வாலியின் உருவபடத்தை திறந்து வைத்தார். கவிஞர் வாலியின் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
 

விழாவில் நல்லிகுப்புசாமி பேசுகையில் பழங்காலம் முதல் தற்போதைய நவீன காலத்துக்கேற்ற பாடல்களையும் எழுதி, 4 தலைமுறை ரசிகர்களை கட்டுக்குள் வை்திருந்தவர் கவிஞர் வாரி என்றார். 
 

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஏற்புரை ஆற்றி பேசுகையில், காலம் பொன் போன்றது அல்ல. உயிர் போன்றது, உயிரையும் காலத்தையும் வாங்கவே முடியாது. காலத்தை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டியது அவசியம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க தமிழர்கள் ஒருங்கிணைந்து உருவாக்க உறுதியேற்க வேண்டும் நாம் ஒன்றுபட்டு நின்றால் தான் வெற்றி பெற முடியும் நாட்டில் டாஸ்மார்க் வியாபாராம் தான் நன்றாக இருக்கிறது. அதனால் குடிபழக்கம் உடையவர்கள் அந்த பழக்கத்தை கை விட்டால் தான் நாடும், வீடும் நன்றாக இருக்கும்.
 

கவிஞர் காசி ஆனந்தன் ஏற்புரையில் வரலாற்றில் நிலையாக இயக்கும் இலக்கியவாதி கவிஞர் வாலி, அவரது பார்வையில் யாரிடமும் காணாத புதுமை புதைந்திருக்கும், அந்த வரிசையில் தற்போது தமிழகத்தில் புதிய இலக்கிய சிந்தனை பரவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு கவிஞர்கள் கல்யாணசுந்தரம், வாலி போன்றவர்கள் தான் காரணம் என்றார். 
 

நடிகர் சார்லி பேசுகையில், உள்ளமும் புறமும் ஒன்றாக இருந்தவர் வாலி, தான் பெற்ற ஞானம் சாமானியருக்கும் சென்று சேர வேண்டும், என்ற ஆதங்கத்தை கொண்டவர் வாலி, கடைசிவரை அவரிடம் தெளிவு இருந்தது. காலம் உள்ள வரை வாலியின் புகழ் நிலைத்திருக்கும் என்றார். 
 

பேராசியர் ஞானசம்பந்தன் பேசுகையில், தான் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார். எம்.ஜி.ஆர்.ஐயே மயங்க வைத்த புகழுக்குரியவர், ஈரத்தமிழை உள் வாங்கி தலைமுறை தாண்டி பாட்டு எழுதி அனைத்து தரப்பினரையும் ஈர்த்த பெருமைக்குரியவர். 
 

விழாவில் திரைப்பட பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா, பொள்ளாட்சி பி.ஏ.கல்வி நிறுவனங்கள்களின் தலைவர் அப்புக்குட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Next Story

தனுஷை சந்தித்த சிதம்பரம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
manjummel boys director chidambaram meets dhanush

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் பேசப்படுகிறது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களுடன் படமும் பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் சிதம்பரம் தனுஷை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.