Skip to main content

1 லி., பெட்ரோல் 200 ரூபாய், 1 மெழுகுவர்த்தி 20 ரூபாய்... எரிகிற டெல்டாவில் பிடுங்கும் சில வியாபாரிகள்!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

 

2016ல் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து சென்னை மீண்டது. ஆனால், அது இழந்த மரங்கள், ஏற்பட்ட சுற்றச் சூழல் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே சொல்லலாம். பிறகு அதைப்போல ஒரு மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு கொண்டிருக்கிறது டெல்டா. 1952ல் வீசிய நந்தன வருட புயலுக்கு பின் மிகப்பெரிய புயல் என வேதாரண்யம் மக்களால் கூறப்படும் இது, பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு சென்றுள்ளது. இதில் கடற்கரைக்கு மிக அருகிலுள்ள வேதாரண்யம், புஷ்பவனம், கத்தரிப்புலம், கரியாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், லட்சக்கணக்கான மரங்கள் என வரலாறு காணாத பேரழிவாகவே உள்ளது இந்த கஜா புயல். 

 

gaj

 

நெல்லுக்குப் பிறகு வருமானம் தரும் பயிராக டெல்டா மக்களால் அதிக அளவு வளர்க்கப்பட்டது தென்னையும், முந்திரியும். இவையும் இந்தப் புயலிலிருந்து தப்பிக்கவில்லை. ஆடுகள், மாடுகள் என ஆயிரக்கணக்கான வளர்ப்பு பிராணிகளையும் இழந்து தத்தளித்த அந்த மக்களுக்கு, அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் கிடைக்கும் முன்னரே உதவிக்கரம் நீட்டியது மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள்தான். பல்வேறு மாவட்டங்களில் இருந்து உதவிகள் குவிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத்தான் அந்த உதவிப் பொருட்கள் கடைமடை பகுதிகளை சென்றடைய ஆரம்பித்திருக்கின்றன.

 

இதுபோல பல்வேறு திசைகளில் இருந்து உதவிகள் வந்தாலும், 2015 வெள்ளத்தின் போது சென்னையில் நடந்தது போல  டெல்டாவிலும் நடக்கிறது. ஒரு சில பேராசை பிடித்த வியாபாரிகள் இந்த நேரத்தை உபயோகித்துக்கொண்டு பிளாக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாய், ஒரு மெழுகுவர்த்தி 20 ரூபாய் எனவும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கும் விற்கிறார்கள். இதை விட ஒரு படி மேல் சென்று ஜெனெரேட்டர் மூலம் கைபேசிக்கு சார்ஜ் போட்டுத் தர 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இப்படி இருக்கும் அதே ஊரில்தான் காசு வாங்காமல் இரவு பகலாக இலவச மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும், தேவையான உணவுப் பொருட்களை விலையின்றி எடுத்து செல்ல சொல்லும் கடைக்காரர்களும் கூட இருக்கின்றனர்.

 

எது எப்படியோ, நம் அனைவருக்கும் உணவளிக்கும் டெல்டா விவசாயிகள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது. விருப்பத்தோடு மட்டும் விடாமல், நம்மால் முடிந்த உதவிகளை செய்தால் நிச்சயம் அவர்களது மீட்சி வெகு விரைவானதாகவே இருக்கும்.

சார்ந்த செய்திகள்

Next Story

தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி மோதி விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலையில், நேற்று (24-01-24) தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் ஒரு லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான  சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது. இதனால் அங்கு கோர விபத்து ஏற்பட்டது. காரிலிருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2024 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர் டவுன்ஹால், அசோக் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23) ஜெனிபர் (29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மழை வெள்ள பாதிப்பு; தமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Rain and flood damage The central committee praises the Tamil Nadu government

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வந்த மத்தியக் குழுவினர் டிசம்பர் 19 ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆய்வு செய்திருந்தனர். மேலும் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாம் கட்டமாக மத்தியக் குழுவினர் 7 பேர் நேற்று (12.01.2024) ஆய்வு செய்தனர். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான இந்த குழுவில் ரங்கநாத் தங்கசாமி, பொன்னுசாமி, ராஜேஷ் திவாரி, விஜயகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் இரண்டாவது கட்டமாக இன்று (13.01.2024) ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவினரின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மத்தியக் குழுவினர் இரு குழுக்களாகப் பிரிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்கள் மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மத்தியக் குழுவில் குழுவில் இடம் பெற்றுள்ள டெல்லி ஊரக வளர்ச்சி இயக்குநர் பாலாஜி, மாநில அரசின் பணி சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார்.