Skip to main content

கடத்திவரப்பட்ட காரைக்கால் மதுபாட்டில்களில் தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர்; அதிர்ச்சியடைந்த போலீசார்!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

தமிழக அரசின்  ஸ்டிக்கரை ஒட்டி நூதனமுறையில் கடத்தப்பட்ட  6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5760 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் இடுபட்ட  இரண்டு பேரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர் நாகை தனிபிரிவு போலீசார் .

 

tasmak

 

நாகை அருகே உள்ள தமிழக எல்லையான வாஞ்சூரில்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையிலான தனிபிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த மீன் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வண்டியில் பால்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மீன்வண்டியில் பால்பெட்டி எதற்கு என சந்தேகமடைந்த காக்கிகள்,  பெட்டிகளை திறக்க சொன்னார்கள் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் திடீரென்று மின்னல் வேகத்தில் வாகனத்தை  வேகமாக  முறுக்கி தப்பி சென்றார். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அருகில் உள்ள நாகூர் ரவுண்டானாவில் இருந்த போலீஸார்  அந்த வாகனத்தை துரத்தி சென்று கிழக்கு கடற்கரை சாலையில் மடக்கி பிடித்தனர். 

 

tasmak

 

அங்கிருந்து தப்பி ஓட முயன்ற  ஓட்டுநரையும் கூடவந்த  மற்றொரு நபரையும் பிடித்துக்கொண்டு, வண்டியை திறந்துபார்த்து அதிரந்தனர். அந்த வண்டியில் பால் ஏற்றுவதுபோல சரக்கு பெட்டிகளை மறைத்து வைத்து மதுபாட்டிகளை கடத்தி வந்துள்ளனர். 120 பெட்டிகளில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5760 புதுச்சேரி மாநில மதுபாட்டிகள் இருந்ததை கைப்பற்றினர். அதோடு அந்த மதுபாட்டில்களில் தமிழக அரசின் டாஸ்மாக் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைக்கண்டு அதிர்சியடைந்தனர்.

 

பின்னர் சரக்கு கடத்திவந்த வாகனத்தையும்,  கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் கல்லறைப்பேட்டை பகுதியை சேர்ந்த பழனிராஜா, பூவம் பகுதியை சேர்ந்த எட்வர்ட்ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனையில் ஈடுபட்டனர். 

 

அதில்" . மதுபாட்டில்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு கடத்தி செல்லவதாகவும். கடத்தப்பட்ட மதுபாட்டிகளில் தமிழக டாஸ்மாக்கடை சரக்குகளில் உள்ள அதே ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்,  அந்த பாட்டில்கள் உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருந்ததவையா? அல்லது அங்குள்ள அதிகாரிகளின் துணையோடு வெளியில் விற்பனை செய்வதற்காக ஸ்டிக்கர்களை வாங்கிச்சென்று ஒட்டி கடத்தியுள்ளனரா என்கிற  கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.