Skip to main content

அதிகாரிகள் துணையோடு அரசியல்வாதிகள் அடிக்கும் மணல் கொள்ளை!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019

தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை என்பது பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருச்சி, முசிறி, கரூர் ஆகிய இடங்களில் உள்ள குவாரிகளில் மணல் அள்ள தடைவிதித்து மதுரை உயர்நீதிமன்றம் அறிவிப்பு கொடுத்தது. அதனால் திருச்சி பகுதியில் மணல் அள்ளுவது என்பது பகல் நேரங்களில் குறைந்து விட்டது என்றாலும் இரவு நேரங்களில் பல இடங்களில் இன்னமும் மணல் கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மணல் கொள்ளைக்கு பின்னால் ஆளும் கட்சியின் அரசியல் வாதிகள் நேரடியாக தலையீடு இருப்பதால் அதிகாரிகள் எல்லோரும் அரசியல் வாதிகளுக்கு பயந்து மணல் கொள்ளைக்கு உடந்தையாகி விடுகிறார்கள். கேட்கிற பணம் கிடைப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் மணல் கொள்ளையினால் பாதிக்கப்படும் பொதுமக்களின் விடா முயற்சியால் பல இடங்களில் மணல் கொள்ளைகள் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அத்தனை முயற்சிகளையும் அதிகாரிகள் தடுத்து விடுகிறார்கள் என்பதற்கு முசிறி மணல் கொள்ளை சம்பவம் உதாரணம்.

 

 

SAND TRICHY

 

 

முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரத்தில் உள்ள மணல் குவாரியை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மூடப்பட்டது. முசிறியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக அதிமுக செல்வராஜ் உள்ளார். இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மதுரா சம்பத். இவர் முசிறியில் மெடிக்கல் கடை வைத்திருக்கிறார். இவர் எம்.எல்.ஏ. செல்வராஜ் உதவியுடன் 6 க்கும்  மேற்பட்ட லாரிகளை வைத்து நீதிமன்ற உத்தரவை மீறி மூடப்பட்ட மணல் குவாரியில் திருட்டுத்தனமாக தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இங்கே எடுக்கப்படும் மணல்கள் எல்லாம் உமையாள் புரத்தில் எதிரே உள்ள புதிதாக வாங்கிய எம்.எல்.ஏ. செல்வராஜ்க்கு வேண்டப்பட்ட 7 ஏக்கர் நிலத்தில் மணலை கொண்டு போய் ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். அங்கே இருந்து நாமக்கல் நெடுஞ்சாலை வழியே மணல் கடத்தி செல்கிறார்கள். இதற்கு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியை மேற்கொள்ளும் போலீசார் முழுக்க துணையாக இருக்கிறார்கள். 

 

 

SAND

 

 

பிறகு அந்த ஏரியா பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தவுடன் அதிகாலையில் மணல் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அந்த ஏரியா தாசில்தார் சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று திருச்சி கலெக்டர் சிவராசுக்கு மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்ததும், அவர் மாவட்ட எஸ்.பியிடம் சொல்லி உடனே நடவடிக்கை எடுக்க சொல்ல முசிறிக்கு புதிதாக பொறுப்பெற்றுள்ள தமிழ்மாறன் உடனே மணல் அள்ளிக்கொண்டிருந்த இடத்திற்கு செல்ல அதற்குள்ளாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் மணல் கொள்ளையர்களுக்கு தகவல் சொல்லி 5 லாரிகள் எஸ்கேப் ஆகி 1 லாரி மட்டும் டி.எஸ்.பி. கையில் சிக்கியது. 

 

TRICHY

 

 

மணல் கடத்தல் லாரி சிக்கியவுடன் அதை ஓட்டி வந்த ராமராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் மணல் லாரியின் ஓனர் மதுரா சம்பத் வழக்கு பதிவு செய்ய கூடாது என்று எம்.எல்.ஏ. சிபாரிசு செய்து கொண்டியிருக்கிறார்கள். இந்த மணல் மதுராசம்பத் மீது பழைய கலெக்டர் ராசாமணிக்கு தொடர்ச்சியாக மணல் கொள்ளை குறித்து  தொடர்ந்து புகார் வந்து கொண்டே இருந்தால் மதுராசம்பத் மீது குண்டாஸ் போடுவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முசியில் உள்ள உள்ளுர் அதிகாரிகள் எல்லோரும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் நிலையில் வெளியூர் அதிகாரிகளிடம் தகவல் சொல்லி தான் உள்ளுர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மணல் கொள்ளை தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அந்த பகுதிமக்கள். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.