Skip to main content

டெங்கு காய்ச்சலால் வழக்கறிஞர் பலி! வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் கொடுத்த நிலவேம்பு குடிநீர்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, தமிழகத்தில், 4,779 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நான்கு பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும், 91 ஆயிரத்து, 457 பேர் பாதிக்கப்பட்டு, 82 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக, கேரளாவில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும், 2018ல், 1.02 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 172 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு உயிரிழப்பு குறைந்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தமிழகம் முழுவதும் டெங்கு தொற்று நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில் டெங்கு நோய் தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் பெரும்பாலானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணப்பாறை வழக்கறிஞர் அப்பாசாமியின் மனைவி வழக்கறிஞர் ஜெயலெட்சுமி என்பவர் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் டெங்குவை தடுக்க, விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

trichy district lawyers dengue fever awareness program nilavembu kashayam


இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலர் வெங்கட் தலைமை வகித்தார். குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் கார்த்திக் ஆசாத், திருவேணி, சோமசுந்தரம், குமார், பாலகிருஷ்ணன், ஷகிலா, மணிவாசகம் உள்ளிட்டோர்கள் பங்கேற்றார்கள். மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் டயர் ,தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் மழை நீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன. இதனால் உடலில் தட்டணுக்கள் குறைந்து விடும். ஆகையினால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நிலவேம்பு கசாயம் பருகவேண்டும்.
 

நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் மிக சரியான விகிதத்தில் தயாரிக்கப்படும் கலவையே நிலவேம்புக் குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயமாகும்.

trichy district lawyers dengue fever awareness program nilavembu kashayam


 

நிலவேம்பு குடிநீர் அல்லது கசாயம் பருகுவதால்:

உடலில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்கள் நீங்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வந்தால், டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம், பப்பாளி இலைச்சாறும் அருந்தலாம் என எடுத்துக் கூறப்பட்டது.

trichy district lawyers dengue fever awareness program nilavembu kashayam

ஆயுசு நூறு ஆயுர்வேதம் சித்தா ஆலயம் வழங்கிய நிலவேம்பு குடிநீரினை வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உட்பட பலருக்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் பிரபு, செந்தில்நாதன், இணைச் செயலர் ஜானகிராமன், பொருளாளர் வடிவேல், மூத்த வழக்கறிஞர் ஸ்தனிஸ்தலஸ், சித்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.