Skip to main content

கூட்டுறவு சங்கத்தில் கோடிகணக்கில் முறைகேடு! அ.தி.மு.க. நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

 

tiruchirappalli



திருச்சி தில்லைநகர் என்பது திருச்சியில் மிகவும் வசதிபடைத்தவர்களுக்கு என்று உருவாக்கம் செய்யப்பட்ட இடமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் சொந்தமாக இடம் வாங்குவது என்பது தற்போது யாராலும் அவ்வளவு எளிதில் இடம் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தால், சதுர அடி 2,990 ரூபாய்க்கு விற்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மறுநாளே, 3.30 கோடி ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது. இதையடுத்து, சங்கத்தின் செயலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு தற்போது அந்த தில்லைநகர் கூட்டுறவு சங்கததின் அ.தி.மு.க. நிர்வாககுழு கலைக்கப்பட்டுள்ளது. 

 

தில்லைநகர் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் நிர்வாகக்குழு, 6 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றனர். குழுவின் தலைவராக, அ.தி.மு.க.,பாலக்கரை பகுதி செயலர், கலீலுர் ரகுமான் உள்ளார். நிர்வாகக் குழுவின் கூட்டம், கடந் அக்டோபர் மாதம் நடைபெற்றது. 
 

இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில், தில்லைநகர் பேரன்ட் காலனியில் உள்ள, 6,750 சதுர அடி நிலத்தை, விக்னேஸ்வரி என்பவருக்கும், தென்னூர் அண்ணாநகரில் உள்ள, 2,790 சதுர அடி நிலத்தை, ஹக்கீம் என்பவருக்கும் உரிமை மாற்றம் செய்து தர, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 

இதற்காக, விக்னேஸ்வரியிடம், 2,990 ரூபாயும், ஹக்கீமிடம், 3,069 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் படி, அந்த இடத்தை, கூட்டுறவு சங்கத்தின் செயலர், வேலாயுதம் என்பவர், இருவருக்கும், அக்டோபர்., 3ல் உரிமை மாற்றம் செய்து கொடுத்துள்ளார்.
 

இதில் விக்னேஸ்வரி, 3ம் தேதி, 2,990 ரூபாய்க்கு வாங்கிய இடத்தை, அடுத்த நாள், 4ம் தேதியே, பிரவீண் என்பவருக்கு, 3.30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
 

திருச்சி, தில்லைநகரைப் பொறுத்தவரை, 1 சதுர அடி நிலத்தின் விலை, குறைந்தபட்சமே, 10 ஆயிரத்துக்கு மேல். ஆனால், இந்த உரிமை மாற்றம் மூலம், சதுர அடி, 50 காசுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதேபோல் தான், தென்னூரிலும் நிலத்தின் மதிப்பு உள்ளது. ஆனால், வெறும், 2,990 ரூபாய்க்கு, 6,750 சதுர அடி நிலத்தையும், 3,069 ரூபாய்க்கு, 2,790 சதுர அடி நிலத்தையும் விற்று, கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது. 
 

கூட்டுறவு சங்கத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட காரணம், நிர்வாகக்குழுவின் தலைவர் கலீலுர் ரகுமானுக்கு பெருமளவு பணம் மாறியிருக்கிறது என வீட்டுவசதித் துறை விசாரணையில் இறங்கியதில், அரசு வழிகாட்டு மதிப்புப்படி, இந்த இரு விற்பனையிலும், 56 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. 
 

சந்தை மதிப்புப்படி பார்த்தால், 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.முதல் கட்டமாக, இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த, கூட்டுறவு சங்கத்தின் செயலர் வேலாயுதத்தை, 'சஸ்பெண்ட்' செய்து, கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த விற்பனை மூலம், நிர்வாகக்குழுவினர் எவ்வளவு ஆதாயம் அடைந்தனர், அரசுக்கு எவ்வளவு இழப்பு என்பது குறித்து விசாரிக்க, குழு அமைக்கப்படவுள்ளது. 
 

ஏற்கனவே, சங்கத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த விசாரணைக் குழுவை அமைக்க முடியவில்லை.'அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும், குழு அமைத்து விசாரணை துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'அப்படி ஊழல் நடந்தது உறுதி ஆகும் பட்சத்தில், நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு, இந்த முறைகேடான விற்பனையில் ஆதாயம் அடைந்தவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்; பத்திரப்பதிவும் ரத்து செய்யப்படும்' எனவும், அதிகாரிகள் கூறினர்.
 

பலன் அடைந்த திருச்சி தொழில் அதிபர்கள் ! 
 

புறந்தள்ளப்பட்ட விதிகள்: திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை, ஏற்கனவே வாங்கியவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை மாற்றம் செய்து தர வேண்டும் என்பது விதி. அதேபோல், சங்கத்தில் நீண்டகால உறுப்பினர்களுக்கே, உரிமை மாற்றம் செய்ய வேண்டும். இதை எல்லாம் மீறி வழக்கமாக அந்த சங்கத்தில் விதிகளை எல்லாம் மீறி இந்த உரிமை மாற்றம் நடந்துள்ளது. இடத்தை வாங்கியது, திருச்சியில் செயல்படும், 'மங்கள் அண்ட் மங்கள்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஹக்கீம் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பதால், அமைச்சர் வெல்லமண்டி நடராஜிடம் தஞ்சம் அடைந்தால் அவர் இந்த பிரச்சனையை சரி பண்ண முயற்சி செய்தனர். ஆனால் நிலத்தை வாங்கின தொழில் அதிபர்களோ அந்த நிலத்தை கூட திரும்ப ஒப்படைக்கிறேன். வாங்கின பணத்தை கொடுங்கள் என்கிற பேரம் நடந்து வந்தது. இதற்கு அடுத்தக்கட்டமாக சமீபத்தில் அமைச்சரின் இல்ல விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடியுடன் கூட இது பற்றி பேசியிருக்கிறார்கள். 
 

ஆனால் அதிகாரிகள் விசாரணையில் இதில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் பல கோடி ரூபாய் இழப்புக்கு காரணமான நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது எனக் கேட்டு, நிர்வாகக் குழு தலைவர், கலீலுர் ரகுமான் உட்பட, 11 பேருக்கு விளக்கம் கேட்டு, டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதில் அளிக்காமல் தனக்கு நெருக்கமான அமைச்சரை வைத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான வேலையில் இறங்கினார்கள். 
 

இந்நிலையில், பதிவுத் துறையின் பதிவாளர் வில்வசேகர், தில்லை நகர் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்து, 8 ம் தேதி உத்தரவிட்டுள்ளானர். அடுத்தகட்டமாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஓரு ஊழல் குற்றச்சாட்டில் அ.தி.மு.க. கட்சியின் பகுதி செயலாளர் தலைமையிலான நிர்வாக கமிட்டி ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மர்மம் விலகாத மாணவியின் மரணம்! சாலை மறியலில் பெற்றோர்! திருச்சியில் பரபரப்பு!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
ddd


திருச்சி சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனலெட்சுமி இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரியின் மாணவிகள் விடுதியில் ராஜேஸ்வரி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 


அரியலூர் மாவட்டம் கருப்பூா், பொய்யூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி இரண்டாம் ஆண்டு இளங்களை பார்மா படிப்பை விடுதியில் தங்கி பயின்று வருகிறார். வழக்கம்போல பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்று வந்த மாணவி ராஜேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை  (17.01.2021) மாலை விடுதிக்கு வந்துள்ளார். 

 

திங்கட்கிழமை செமஸ்டா் தோ்வு என்பதால் 18.01.2021 விடியற்காலை 1 மணி வரை சக தோழிகளுடன் அறையில் அமர்ந்து படித்து வந்துள்ளார். இரவு வெகு நேரம் படித்ததில் அவரோடு படித்து கொண்டிருந்த 7 தோழிகளும் அவா்களுடைய அறைக்கு சென்ற நிலையில், அதன்பிறகு ராஜேஸ்வரிக்கு என்ன நடந்தது என்று அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ளது. 

 


திங்கட்கிழமை விடிந்த பிறகு கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரியின் தோழிகள் அவரை அறையில் வந்து தேடி பார்த்துவிட்டு சென்றுள்ளனா். காலை 8.45 மணிக்கு விடுதி கட்டிடத்தின் தரை தளத்தில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த விடுதி மாணவிகள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். 


அவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் முன்பு அவரை எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரிக்கு தூக்கி சென்றுள்ளனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் கிடைத்த நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். 


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் காவல்துறையினா் பெண்ணின் உடலை நிர்வாகத்திடம் இருந்து கைப்பற்றி திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ராஜெஸ்வரி இறந்து கிடந்த பகுதியை கல்லூரி நிர்வாகம் கழுவி விட்டிருந்த நிலையில், எந்தவித தடயமும் கிடைக்காமல் காவல்துறை ஒருபக்கம் திணறி வருகிறது. 

 

மற்றொரு பக்கம் கல்லூரி நிர்வாகம் தன்னுடைய பெண்ணை கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினா்கள், பெண்ணின் உடற்கூறு பரிசோதனையை தலைமை மருத்துவமனையில் வைத்து செய்ய வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 


இதற்கிடையில் கல்லூரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கல்லூரி நிர்வாகம் முன்பு மறியல் போராட்டத்தில் உறவினா்கள் ஈடுபட்டனா். கல்லூரி நிர்வாகம் ராஜேஸ்வரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவலை கொடுத்திருந்த நிலையில் பெண்ணின் உடம்பில் எந்தவித எலும்பு முறிவுகளும் ஏற்படாமல் கழுத்து நெறிக்கப்பட்டு, தாடை பகுதியிலும், தொடைப்பகுதியிலும் சில இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பெரிய சந்தேகத்தை காவல்துறைக்கு ஏற்படுத்தி உள்ளது. 

 

எனவே மாணவியின் மரணம்  தற்கொலை அல்ல, கொலை என்ற கோணத்தில் காவல்துறையும் தன்னுடைய விசாரணையை துவங்கியுள்ளது. இரவு 1 மணிக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித சிறிய தடயமும் கிடைக்காததால் விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு காரணம் பெண்கள் விடுதி என்பதால் கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம். 

 

மாணவி தரப்பினர் கூறும்போது, மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று நிர்வாகத்தரப்பில் சொல்வது முரண்பாடான கருத்தாக உள்ளது. எனவே விரைவில் மா்ம முடிச்சுகள் விலகும், காவல்துறை இந்த வழக்கை புதிய கோணத்தில் கையாண்டு குற்றவாளிகளை பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

 

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முதல் சந்தேகம் கல்லூரி நிர்வாகம் எந்தவித தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவா்களே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனா். 

 

இரண்டாவது கல்லூரி நிர்வாகம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவா் விழும்போது சுவரை ஒட்டியே விழுந்ததாகவும் கொடுத்த தகவலிலும் ஒரு முரண்பாடு உள்ளது. பொதுவாக மேலிருந்து கீழே குதிக்கும்போது கட்டிடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளி விழுவார்கள் ஆனால் நிர்வாகம் சுவரை ஒட்டியே விழுந்ததாக கூறுகின்றனா்.


அதேபோல் மேலிருந்து கீழே வந்து விழும் வேகத்தில் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியாவது முன் மண்டை பகுதி அல்லது பின் மண்டை பகுதி அடிபடும், ஆனால் இந்த பெண்ணில் தலையில் சிறிய காயம் கூட இல்லை. எனவே இது ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. எனவே எதுவாக இருந்தாலும் முழுமையான உடற்கூறு ஆய்வு தகவல் அறிக்கை வந்த பிறகு உரிய விசாரணை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பெண்ணின் உறவினா்கள் கல்லூரியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா இருவரும் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தனர். மருத்துவ அறிக்கை வந்த உடன் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றம் இருப்பின் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும், எனவே இந்த மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையிலான ஒரு தனிப்படை அமைத்திருக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று மாணவியின் பெற்றோரிடம் உறுதியளித்ததாக கூறினார்கள்.

 

 


 

Next Story

சுவர் ஏறி குதித்து திருட முயற்சி... புரட்டி எடுத்த பொதுமக்கள்... சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு...

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
ddd

 

திருச்சி அல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் 2 வாலிபர்கள் திருடுவதற்காக முயன்று வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளனர். 

 

அதை அறிந்த வெங்கடேசன் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் அரவிந்த் என்பவர் தப்பித்து செல்ல தீபு என்ற வாலிபர் சிக்கினார். இவர்களைக் குறித்து பொதுமக்கள் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருவனந்தபுரம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தீபு கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை மிரட்ட அவர்கள் தீபு வை சரமாறியாக தாக்கியுள்ளனர்.  தாக்கியதில் படுகாயம் அடைந்து தீபுவை பொதுமக்களே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

மேலும் தப்பி சென்ற அரவிந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.