Skip to main content

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு 

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
High Court


முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணத்தை சி.பி.ஐ.யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 
 

நெடுஞ்சாலை பணி ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு வழக்கியதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக விசாரிக்காததால் சிபிஐ விசாணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மூன்று மாதத்தில் ஆரம்பக்கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும் என்றும், வழக்கு ஆவணத்தை சி.பி.ஐ.யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு; உத்தரவை ரத்து செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மனு

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

Case against Minister Ponmudi Petition to set aside the order

 

தமிழ்நாட்டில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உட்பட மேலும் ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

விழுப்புரத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறுதியில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், இந்த வழக்கை தாமே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

 

Next Story

காவல்துறையிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரிய வழக்கு! -பைனான்சியர் ககன் போத்ராவுக்கு அபராதம் விதித்து உத்தரவு!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

காவல்துறையிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரிய பைனான்சியர் ககன் போத்ரவுக்கு ரூ.10000 அபராதம் விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

Bodra son issue - High Court order

 



சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ககன் போத்ரா தாக்கல் செய்த மனுவில், தானும், தந்தை முகுந்த்சந்த் போத்ராவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால்,  நற்பெயருக்கும், தொழிலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.  தங்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாகத் தெரிவித்துள்ள அவர்,  ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி, தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.   மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு  விசாரணைக்கு வந்தது.  ககன் போத்ரா மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று  மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி,  மனுதாரரான ககன் போத்ராவுக்கு  ரூ.10000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.