Skip to main content

குறுவை சாகுபடிக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாது!- அமைச்சர் காமராஜ் பேட்டி!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

கோடை கத்திரி வெயில் முடிந்தாலும் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு முன்பில்லாத ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசுகையில்,

 

minister kamaraj interview!

 

குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படாது. எனவே ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம். மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு அனுமதி வழங்காது. தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய தமிழக அரசு போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறினார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்