Skip to main content

"தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது" - கொ.ம.தே.க. ஈஸ்வரன்

Published on 07/01/2019 | Edited on 07/01/2019
e

 

திருவாரூரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலும், இப்போது நிறுத்தப்பட்டதிலும் பெரும்  உள்நோக்கம் உள்ளது. என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்  ஈஸ்வரன் இன்று தெரிவித்தார்.

 

மேலும் அவர் கூறும்போது,   "திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பின் கருத்துகளை கேட்டு நிறுத்துவதற்கு பதிலாக முதலிலேயே கருத்துகளை கேட்டு தேர்தலை அறிவிக்காமல் இருந்திருக்கலாம். ஒரு தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொள்வது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை குறைக்கும். மழையையும், புயலையும் காரணம் காட்டிதான் முதலிலே நடத்தப்பட இருந்த தேர்தல் நிறுத்தப்பட்டது. 

 


கஜா புயல் அடித்து அதிகமான பாதிப்புகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கின்ற ஒரு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை எல்லோரும் ஆச்சரியமாக தான் பார்த்தார்கள். வரும் காலத்தில் இனி தேர்தல் ஆணையம் எந்த தேர்தலை அறிவித்தாலும் அது நடக்குமா என்ற சந்தேகத்தை சந்தேகமில்லாமல் எழுப்பும். R.K.நகர் தேர்தலை ஒருமுறை நிறுத்திய போது கூட பணப்பட்டுவாடா அதிகமாகிவிட்டது என்று சொல்லி நிறுத்தினார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது. 


தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கைகள் என்ன ?. 2014 -ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையமே கடைசி 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவை போட்டு ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு வசதி செய்து கொடுத்தது. தொடர்ந்து இது போன்ற தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நகைப்புக்குரியதாக மாறியிருக்கிறது.  உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட திருவாரூர் தேர்தலை கஜா புயல் நிவாரண பணிகளை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் நிறுத்தி இருக்கிறது. ஆனால் இந்த இடைத்தேர்தல் நடத்தி இருந்தால் அந்த தொகுதி மக்களுக்கு எத்தனை மடங்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். இதுவரை இடைத்தேர்தல்களை கவனித்தவர்களுக்கும் தெரியும். இதுதான் எதார்த்தம்.

 

திடீரென்று தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் வேண்டுமானால் அதிர்ச்சியோடு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் அந்த தொகுதி மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அதிகப்படியாக அரசியல் கட்சிகளால் கவனிக்கப்படுவோம், தேர்தல் நிவாரணம் வழங்கப்படுவோம் என்று ஆசையோடு எதிர்பார்த்து இருந்தார்கள். அதை எதிர்பார்த்து இந்த ஒருவார காலத்தில் கடன் வாங்கி செலவு செய்தவர்களும் உண்டு. அவர்கள் எல்லாம் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். 

 

தமிழகத்தில் ஜனநாயக முறையில் நடக்க வேண்டிய தேர்தல் எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இதற்கொரு தீர்வை காணாமல் இந்த நிலை தொடருமென்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.என ஈஸ்வரன்  கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

STR ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா? ஈஸ்வரன் - விமர்சனம்

Published on 14/01/2021 | Edited on 14/01/2021
eswaran STR

 

தனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் முனைப்புடன் உடல் இளைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கரோனா காலத்திற்குள்ளேயே படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு சிம்பு அளித்த மகிழ்ச்சி படம் பார்த்தபின்பும் தொடர்கிறதா? இயல்பான, தரமான படங்களை தந்து ஆரம்பத்தில் கவனமீர்த்த சுசீந்திரன், சமீபகாலமாக குறுகிய கால - பட்ஜெட் படைப்புகளை கொடுத்து வருகிறார். பட்ஜெட் குறைவது நல்லதுதான், தரமும் குறைந்தால் ஆபத்து.

 

பழனிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் பாரதிராஜாவின் மகன்கள் உள்பட குடும்பத்தினர் அனைவரும் அவரை பிரிந்து வசிக்கின்றனர். சிம்பு, பாரதிராஜாவின் பாதுகாவலராக இருக்கிறார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் ஊருக்கு வர குடும்பம் ஒன்று கூடுகிறது. அதே நேரம், வில்லனின் வன்மத்தாலும் ஜோதிட கணிப்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நேரக்கூடிய ஆபத்திலிருந்து குடும்பத்தை காத்து எதிரிகளை அழித்தாரா சிம்பு என்பதுதான் 'ஈஸ்வரன்' கதை.

 

ஸ்லிம், ஃப்ரெஷ் தோற்றத்தில் ஆட்டம், பாட்டு, அதிரடி... அனைத்திலும் அசத்துகிறார் 'ஆத்மன்' STR. படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு அவர்தான் என்றாலும் அந்த ஈர்ப்பு முதல் அரை மணிநேரம்தான். அடுத்து நம்மை அமர வைக்கக்கூடியது திரைக்கதைதானே?சொல்லப்போனால் படத்தில் சிம்புவுக்கு காட்சிகள் சற்றே குறைவு. அவருக்கு மற்றவர்கள் பில்ட் - அப் கொடுத்தாலும் அவர் சற்று அமைதி காத்திருப்பது ஆறுதல். அதேபோல் அவரது டைமிங் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றன. படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நந்திதா ஸ்வேதா, மற்றொருவர் நிதி அகர்வால். இருவருக்குமே அதிக வேலை இல்லை. மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமும் இல்லை.

 

str with bharathiraja

 

சிம்புவை காட்டிலும் இயக்குனர் பாரதிராஜாவே அதிக காட்சிகளில் தோன்றுகிறார். அவரின் நடிப்பும், கதாபாத்திரமும், அதன் பின்னணி கதையும் படத்தை தாங்கிப் பிடித்து இருக்கிறது. அதுவே படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி தன் முகபாவனைகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார். இவரின் இளவயது கதாபாத்திரமாக நடித்திருக்கும் இவரது மகன் மனோஜ், இயல்பாகப் பொருந்தியிருக்கிறார், நடித்திருக்கிறார். பாலசரவணன், முனீஸ்காந்த் ஆகியோரின் நகைச்சுவை சில இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. காளிவெங்கட், கவனிக்கவைக்கிறார். வில்லன் 'ஸ்டன்' சிவா, மிரட்டலான தோற்றத்தோடு சிறப்பான வில்லனாகக் கூடிய சாத்தியம் இருந்தாலும் அவரது பாத்திரம் அத்தனை அழுத்தமாக இல்லை.

 

ஏற்கனவே பார்த்துப் பழகிய கதை, அரதப்பழசான காட்சி அமைப்பு என பழைய டெம்ப்ளேட்டிலேயே திரைக்கதை அமைத்திருக்கும் சுசீந்திரன் படத்தை வேகமாக முடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தி உள்ளார் என்ற உணர்வு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனாலும் அவரின் அடிப்படை பலமான கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகளுக்கிடையிலான உணர்வுகள், இயல்பான நகைச்சுவை போன்றவை ரசிக்க வைக்கின்றன. கரோனா ஊரடங்கை சரியாகப் பொருத்தியிருப்பது நல்ல யோசனை.

 

திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் பாடல்களும், கிராமத்துக் காட்சிகளும் அழகாக இருக்கின்றன. தமனின் இசை மிக வேகமாக இருக்கிறது, வேகமாக நம்மை கடந்து சென்றுவிடுகிறது. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, அழுத்தமாக இல்லை. தமிழ் சினிமா கண்ட பல கிராமத்து படங்களின் சாயல்களுடன் உருவாகியுள்ள ’ஈஸ்வரன்’, குடும்பங்களுக்கு ஓகே. STRஐ எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் குறைவுதான். 


 

Next Story

"சிம்பு ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக அமையும்" - இயக்குநர் சுசீந்திரன்.

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
vdsghs

 

நடிகர் சிம்பு நடித்திருக்கும் “ஈஸ்வரன்” படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்து பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சுசீந்திரன். ஈஸ்வரன் படம் குறித்து பேசும்போது....


'ஈஸ்வரன்' படத்தின் முதல் பொறி என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான். ஒரு முறை, ஜோசியர் ஒருவர் எங்கள் குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் என்று கூறிய சம்பவத்தின் தாக்கம். அதனால் என் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். அது கதையாக என்னுள் ஈஸ்வரனாக உருவானது. இதை நடிகர் சிம்புவிடம் கதை சொல்ல வாய்ப்பு வந்தபோது , நான் ஒரு பழிவாங்கும் கதையை வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு பழிவாங்கும் கதை மேல் பெரிய ஈர்ப்பு இல்லை. பிறகு இந்த கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அட்டகாசமான கம்பேக்காக இருக்கும் என நம்பினார். உடனே ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பில் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஒத்துழைப்பால் தான் படத்தை வேகமாக முடிக்க முடிந்தது. 

 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இது  எனக்கு நான்காவது படம். அவருடன் பணியாற்றும் போது எப்போதும் பிரம்மிப்பாகவே  இருக்கும். இத்தனை சாதனைகளுக்கு பிறகும் மிகவும் எளிமையாக இருப்பார். என்னுடைய படங்கள் வேகமாக படப்பிடிப்பு முடிவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணம் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான். படப்பிடிப்பு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்  வேகமாக ஓடிக்கொண்டே இருப்பேன். படத்தின் தரம் குறைய கூடாது என்பது மட்டும் தான் என் குறிக்கோள். ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான வகையிலும் அதே நேரத்தில் தரத்திலும் சிறந்த படங்களை தர வேண்டும். இந்தப்படம் திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சி தரும். சிம்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக, குடும்பங்களோடு கொண்டாடும் படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் பொறி பறக்கும் அனுபவத்தை தரும். படத்தை ரசிகர்கள் ரசிக்க நானும் ஆவலோடு வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன்" என்றார்.