Skip to main content

சிறப்பு வகுப்பு சிறப்பாக நடக்கிறதா மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
collector



திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் கடந்த ஆண்டுகளில் குறைவாக உள்ள 75 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிதத்தை உயர்த்துவதற்காக காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டும், சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த பயிற்சிகள் சரியாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய முடிவு செய்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இன்று ஜனவரி 2ந்தேதி, கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிதம் உயர்வதற்கும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார். மேலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி சதவிதத்தை உயர்த்தி எங்கள் பள்ளிக்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்களுக்கு பெறுமை சேர்போம் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.


அதோடு, கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலமாக இந்த பருவத்துக்காக வழங்கப்படும் பாடப்புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டப்பின் மதிய உணவு சாப்பிட்டார். கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுடன் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் உயர்வதற்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.