Skip to main content

1 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மிரட்டும் பிரபல ரவுடி !

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

திருச்சி கேகே நகர் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜா (எ) அழகர்சாமி விடுதலை சிறுத்தைகள் வணிகர் அணி மாநில துணைச் செயலாளர். இவரது தம்பி ரமேஷ்குமார் கட்சியின் அச்சு ஊடக மைய மாநில துணைச்செயலாளராக உள்ளார். இருவரும் ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி இரவு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து அழகர்சாமி காரில் வீட்டிற்கு புறப்பட்டார். 

 

thiruchy kknagar Business Leader kidnaping case

 

அப்போது 2 கார்களில் வந்த 7 பேர் கும்பல் காரை வழிமறித்து அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி அவர்களது காரில் அழகர்சாமியை கடத்திச் சென்றனர். மேலும் அவரிடமிடிருந்து ரூ.4 லட்சம் பணம், 18 பவுன் நகைகளை பறித்தனர். கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சென்றதும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர். 

 

அவர் பணம் தர மறுத்துவிட்டார். பின்னர் பேரம் பேசியதில் ரூ. 40 லட்சம் தருவதற்கு அழகர்சாமி ஒத்துக்கொண்டதும் கும்பலை சேர்ந்தவர்கள் அழகர்சாமியை கீழே இறக்கி விட்டு விட்டு அவரின் காரிலேயே தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்த அழகர்சாமியின் தம்பி ரமேஷ் குமார் வேறு காரில் சென்று அழகர்சாமியை கே.கே. நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

 

அங்கு அளித்த புகாரில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அசோக் மற்றும் பட்டாசு ராஜா ஆகிய இருவருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், ஏற்கனவே அழகர்சாமியுடன் இணைந்து தொழில் புரிந்து வந்த இருவரும் தற்போது விலகிச் சென்றுவிட்டனர். 

thiruchy kknagar Business Leader kidnaping case

 

கடந்த வாரம் அழகர்சாமியை இருவரும் மிரட்டியதாக புகாரில் கூறியுள்ளார். வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வேல்முருகன் திருச்சி ஜீவாநகர் ராஜா என்கிற ராஜேந்திரன் (31),ரங்கத்தை சேர்ந்த ராஜ்குமார் (29), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெருமாள்கோயில்தெருவை சேர்ந்த ஆதிநாராயணன் (29) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார். மேலும் பட்டாசு ராஜா சாமி ரவி அசோக் செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள். 

 

இதில் சாமி ரவி என்கிற ரவுடி தமிழத்தில் மிக முக்கியமான ரவுடி பணத்திற்காக ஆட்களை கொலை செய்த வழக்கிலும், ராமஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்டவர். பிரபல ரவடி முட்டை ரவி குழுவில் இருந்தவர் சாமிரவி என்பதால் அதே தொடர்புகளை வைத்தே தமிழகம் முழுவதும் பெரிய நெட்ஒர்க் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். 

 

சமீபத்தில் இவரை தேடுவதற்கு சிபிசிஐடியில் தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனாலும் ஆளும் கட்சியின் மேலிடத்தோடு மிக நெருக்கமாக இருப்பதால் போலிசால் இவரை நெருங்க முடியவில்லை. 

 

தற்போது ஒரு வழக்கறிஞர் உதவியுடன் சாமிரவி எடுத்த பணத்தை கொடுத்து விடுவதாகவும், வழக்கை வாபஸ் வாங்கும் படி பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.