Skip to main content

தொடரும் பதற்றம்; சந்திரபாபு நாயுடுவை விடுவிக்கக் கோரி போராட்டம்!

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Telugu Desam Party members struggle Chandrababu Naidu arrest arrested

 

திருவள்ளூர் அருகே சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் கைது.

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நெடுஞ்சாலையில் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரைக் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்