Published on 09/08/2020 | Edited on 09/08/2020
தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து கர்நாடகாவில் கபினி மற்றும் கே.எஸ்.ஆர் அணையிலிருந்து நீர்திறப்பு என்பது படிப்படியாக தற்போது வரை அதிகரித்துள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 81 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வரை மேட்டூர் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.