Skip to main content

ஜூன் 12 காவிரி நீர் கிடைக்க உச்ச நீதிமன்றம் கண்காணித்திட வேண்டும்-பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

ஜூன் 12-ல் காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றம் ஆணையத்தை கண்காணித்திட வேண்டும் என பி.ஆர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,

 

தமிழக காவிரி உரிமை மீட்பிற்க்கான போராட்டம் தமிழக அரசு, அனைத்து கட்சிகள், விவசாய அமைப்புகள், வணிகர்கள் , இளை ஞர்கள், மாணவர்கள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும்  ஒத்தக்கருத்தோடு தமிழர் என்ற உணர்வோடு அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டோம்.

 

pr pandiyan

 

ஆனால் மத்திய அரசோ வாரியம் அமைக்க இறுதி கட்டம் வரை மறுத்து  தமிழக நலனுக்கு எதிராக ஆணையம் தான் அமைப்பேன் என்று துரோகம் செய்துள்ளது. இந் நிலையில் உச்சநீதிமன்றம் உறுதியோடு நின்று தமிழக நலன் கருதி முழு அதிகாரம் கொண்ட ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

 

இதனை ஏற்று மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அதனை அரசிதழில் வெளியிட்டு முதல் கூட்டம் உடன் நடத்தப்பட்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைத்திட செய்திட வேண்டும். 15 ஆண்டுகள் வரை தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய இயலாது என்பதால் ஆணையத்தின் செயல்பாடுகளை தமிழக விவசாயிகள் நலன் கருதி உச்சநீதி மன்றமே தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 

காவிரி உரிமை மீட்பிற்க்கான போராட்டத்தில் ஒத்த கருத்தோடு உறுதியோடு போராடி சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர்கள் , விவசாய அமைப்புகள், தொழிற்சங்க அமைப்புகள், அரசு ஊழியர்கள், தமிழகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், உயரதிகாரிகள், பத்திரிக்கை, ஊடக செய்தியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

அங்கொன்றும் இங்கொன்றுமான போராட்டத்திற்கெதிரான அடக்கு முறையை கையாண்டாலும் உணர்வுபூர்வமாக காவிரி உரிமை மீட்டிட உதவி செய்த காவல்துறைக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறோம். தொடர்ந்து தீர்ப்பை செயல்படுத்தும்வரை ஒன்றுப்பட்ட போராட்டம் தொடர்ந்திடவும், ஏற்கனவே இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், விவசாயத்தையும், விளை நிலங்களையும் பாதுகாக்க ஒன்றுப்பட்ட போராட்டம் தொடர்ந்திடவும் வேண்டுகிறோம்.

 

மேலும் போராட்டத்தில் பங்கெடுத்த தமிழக முதலமைச்சர், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், வணிகர்கள் , விவசாயிகளுக்கு பாராட்டு விழாவை ஜூன் மாதத்தில் நடத்துவோம் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.