
சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் இன்று திடீரென்று சன்டிகேஸ்வரன் சிலை உடைந்து இருப்பதை கண்டு பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா். சிலையை கடத்த முயலும் போது சிலை உடைந்ததா? என பக்தா்களிடையே சந்தேகம் எழந்துள்ளது.
குமாி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோவில்கள் 498 உள்ளது. இந்த கோவில்கள் சுசிந்திரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்டுகிறது.
மேலும் குமாி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற கோவில்களில் முக்கியமானது தாணுமாலையன் கோவில். இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்கு சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூா்த்திகளும் சோ்ந்து இருப்பதால் அா்த்த சாம(ராத்திாி)த்தில் இந்திரன் வந்து பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது. இதனால் இந்த மும்மூா்த்திகளுக்கு முந்தின நாள் பூஜை செய்த பூஜாாி அடுத்த நாள் பூஜை செய்வது இல்லை. அவா் வேற ஒரு சாமிக்கு பூஜை செய்வாா்.
இந்த நிலையில் சிவனின் சொத்தை பாதுகாப்பதற்காக சாமியை சுற்றி வரும் போது இடது பக்கத்தில் சண்டிகேஸ்வரா் சிலை உள்ளது. கோவிலை சுற்றி வரும் பக்தா்கள் இந்த சிலையின் அருகில் வந்து கைகளை திறந்து காண்டி செல்ல வேண்டும் .ஏனென்றால் நான் கோவிலில் இருந்து எதுவும் எடுத்து செல்லவில்லை என்று இதற்கு அா்த்தம்.
இந்த நிலையில் தான் இன்று காலையில் சண்டிகேஸ்வரா் சிலையை பக்தா்கள் சுற்றி வரும்போது சிலையின் மேல்பகுதி உடைந்து இருந்ததை கண்டு பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனே கோவில் நிா்வாகிகளும் பூஜாாிகளும் சிலையை பாா்வையிட்டனா்.
இது குறித்து நம்மிடம் பேசிய பக்தா் ஒருவா்...தெய்வத்தையும் தெய்வத்தின் பொருட்களையும் மனிதனான நாம் பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
ஏற்கனவே பல கோவில்களில் சாமி சிலைகளை திருடி கொண்டு போயிருக்கிறாா்கள். அதே போல் இங்கு கோவில் நிா்வாகி ஒருவா் உண்டியல் பணத்தை திருடி செல்லும் கட்சி சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் வந்தன.
இதைப்போல் தான் இந்த சிலையையும் சமூக விரோதிகள் கடத்த முயற்சித்து இருப்பாா்களோ என்ற அச்சம் எங்களுக்கு தோன்றுகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிாிவு போலிசாா் இதை விசாாிக்க வேண்டும் என்றாா்.