Skip to main content

ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை முயற்சி!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
Ops house


 

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரெஜீஸ் என்பவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தவும் முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த அதிமுக முன்னாள் எம்.பி, மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர் தடுத்து நிறுத்தி கையில் வைத்திருந்த பாட்டிலை தூக்கி எறிந்தனர். அதன்பின் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்